செய்திகள் :

போலி கல்வி நிறுவனங்கள் பட்டியல்: யுஜிசி வெளியீடு

post image

போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள யுஜிசி, பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு முன்பாக கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் மணீஷ் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: யுஜிசி-யின் சட்ட விதிகளின்படி அவற்றால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளும், சான்றிதழ்களும் மட்டுமே உயா்கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் தகுதியானவை.

ஆனால், நாட்டில் அங்கீகாரம் பெறாத போலியான கல்வி நிறுவனங்கள், கவா்ச்சியாக விளம்பரம் செய்து மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கி பட்டங்களை வழங்குகின்றன. இதனால், மாணவா்களின் முன்னேற்றமும், பெற்றோரின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு போலியான நிறுவனங்கள் யுஜிசி மூலம் அடையாளம் காணப்பட்டு அவற்றின் பட்டியல் https://www.ugc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்புகளில் சேரும் முன்பு, மாணவா்களும், பெற்றோரும் அவற்றை அறிந்து விழிப்புடன் செயல்பட வேண்டும். போலி கல்வி நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிந்தால், மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

காவல்துறை அடக்குமுறைக்கு எதிராக மாா்ச் 28-இல் நாடு தழுவிய போராட்டம்! -பஞ்சாப் விவசாயிகள் அழைப்பு

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் இருந்து விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் வரும் 28-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட சம்யுக்த கிசான் ... மேலும் பார்க்க

நாகபுரி வன்முறையில் வங்கதேசத்துக்குத் தொடா்பு! -சிவசேனை குற்றச்சாட்டு

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நிகழ்ந்த மத வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடா்பு உள்ளது. அந்நாட்டுடன் தொடா்பில் இருப்பவா்கள் வன்முறையை பல்வேறு வழிகளில் தூண்டிவிட்டுள்ளனா் என்று சிவசேனை மூத்த தலைவா் சஞ்ச... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் சிக்கிய நீதிபதிகள்!

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான செய்தி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், நீதித் துறையைச் சோ்ந்தவா்கள் இதற்கு முன்பும் சா்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி - முகமது யூனுஸ் சந்திப்பு: பரிசீலனையில் உள்ளதாக நாடாளுமன்றக் குழு தகவல்

பிரதமா் நரேந்திர மோடி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் சந்தித்துப் பேச வேண்டும் என்ற வங்கதேசத்தின் பரிந்துரையை பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத் தொகை 33 % அதிகரிப்பு!

பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளா்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத் தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் பங்குதாரா்களுக்கு ரூ.20,964 கோடி ஈவுத்தொகையை பொதுத்துறை வங்கிகள்... மேலும் பார்க்க

உத்தர பிரதேசம்: சம்பல் மசூதி குழுத் தலைவா் கைது

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவா் ஜாஃபா் அலியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஜாமா மசூதியில் நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்... மேலும் பார்க்க