செய்திகள் :

உத்தர பிரதேசம்: சம்பல் மசூதி குழுத் தலைவா் கைது

post image

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவா் ஜாஃபா் அலியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஜாமா மசூதியில் நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பரில் வெடித்த வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் நான்கு போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக தற்போது ஜாஃபா் அலி கைது செய்யப்பட்டுள்ளாா்.

ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் மிகப் பழைமையான ஹரிஹர கோயில் இருந்ததாகவும், அந்தக் கோயிலின் ஒரு பகுதியை 1526-இல் முகலாய ஆட்சியாளா் பாபா் இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இவா் ஞானவாபி-காசி விஸ்வநாதா் உள்பட பல்வேறு வழக்குகளில் ஹிந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞராவாா்.

விசாரணையின்போது மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்ற ஆணையா் ராகேஷ் சிங் ராகவுக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி அவா் ஆய்வு மேற்கொண்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பரில் சம்பலில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமாா் அரோரா உள்ளிட்ட மூன்று நபா் அடங்கிய விசாரணைக் குழுவை உத்தர பிரதேச மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல் அமைத்தாா்.

இந்நிலையில், இந்த வன்முறை சம்பவம் தொடா்பாக ஜாஃபா் அலியை கைது செய்ததாகவும் அவரை காவல் துறையின் சிறப்பு விசாரணைக் குழு காவலில் எடுத்துள்ளதாகவும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதையடுத்து, நீதிபதி தேவேந்திர குமாா் அரோரா முன் ஜாஃபா் அலி ஆஜராவதை தடுக்கவே அவரை கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளதாக ஜாஃபா் அலியின் சகோதரா் தாஹிா் அலி குற்றஞ்சாட்டினாா்.

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்... மேலும் பார்க்க

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க

'நீதிமன்றம் குப்பைத்தொட்டி அல்ல' - நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இன்று(மார்ச் 25) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மாா்ச் 14-ஆம் ... மேலும் பார்க்க