செய்திகள் :

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

post image

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் இருமடங்காகியுள்ளன.

உயிரி மருத்துவம் மற்றும் வாழ்க்கை அறிவியல் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுவரும் பப்மெட் நிறுவனம் இந்தத் தரவுகளை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தால் இந்நிறுவனத்தின் ஆய்வுகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

இந்தத் தரவுகளின்படி 2025 மார்ச் மாதம் வரையிலும் 1,911 ஆய்வுகள் அஸ்வகந்தா குறித்து செய்யப்பட்டுள்ளன. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் இரு மடங்காகியுள்ளன. இந்நிறுவனம் வெளியிடும் ஆய்வு முடிவுகளில் இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.

அஸ்வகந்தாவின் உயிரியல் கலவைகள் புற்றுநோயைக் குணப்படுத்தும் திறனுடையது என்றும், ஆரம்பநிலையிலுள்ள மூளை கட்டி செல்களை அழிக்கும் பண்புடையது எனவும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதோடுமட்டுமின்றி உடல் அழற்சி, கட்டிகள், ரத்தக் கட்டிகள், நோய் எதிர்ப்பு சக்தி, புத்துணர்ச்சி உள்ளிட்ட பல்வேறு குணநலன்களுடையவை. தூக்கமின்மையால் அவதிப்படுவோருக்கு அஸ்வகந்தாவை உணவில் எடுத்துக்கொள்வது பலனளிக்கிறது.

400 பேர் கொண்டு நடத்தப்பட்ட ஆயவில், அஸ்வகந்தாவின் சாறு உணவாக எடுத்துக்கொள்ளும்போது மெல்லிய தூக்கத்தைக் கொடுக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூக்கமின்மையால் (இன்சோம்னியா) போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அஸ்வகந்தா சாறு பலன் அளிக்கக் கூடியதாக அமையும். மேலும், இதனை எடுத்துக்கொள்பவர்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அஸ்வகந்தா என்றால் என்ன?

அஸ்வகந்தா என்பது இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மூலிகையாகும். இதன் இலையும், வேரும் மருத்துவ குணமுடையவை.

குறிப்பாக சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. விதானியா சோம்னிஃபெரா என்பது இதன் அறிவியல் பெயராகும். இந்தியாவில் வெப்பமான இடங்களில் இவை அதிகம் விளைகின்றன.

இதையும் படிக்க | வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

2 ஆண்டுகளில் 12,957 கூட்டுறவு சங்கங்கள் பதிவு: அமித் ஷா

கடந்த 2 ஆண்டுகளில் வேளாண்மை, பால்வளம் மற்றும் மீன்வளம் என 12,957 புதிய கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: குணால் காம்ரா

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சவை பேச்சாளா் குணால் காம்ரா தெரிவித்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ... மேலும் பார்க்க

கொதிகலன் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய கொதிகலன் சட்ட மசோதா-2024 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின... மேலும் பார்க்க

போலி ரசீதுகள் மூலம் பல கோடி வரி சலுகை பெற்ற பொதுத் துறை, காா்ப்பரேட் நிறுவன ஊழியா்கள்: வருமான வரித் துறை தகவல்

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் காா்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியா்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தபோது போலியான வரி சேமிப்பு ரசீதுகளை சமா்ப்பித்து பல கோடி ரூபாய் வரி சலுகை பெற்று மோசடி செய்திருப்பதாக வ... மேலும் பார்க்க

புதிய வருமான வரி மசோதா: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா குறித்து விவாதம் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். இதுதொடா்பாக மக்களவையில் நிதி மசோதா 2025 மீதான விவா... மேலும் பார்க்க

நிதி மசோதா 2025: 35 அரசு திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றம்

இணையவழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் உள்பட மத்திய அரசின் 35 திருத்தங்களுடன், மக்களவையில் நிதி மசோதா 2025 செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களவை... மேலும் பார்க்க