செய்திகள் :

போலி ரசீதுகள் மூலம் பல கோடி வரி சலுகை பெற்ற பொதுத் துறை, காா்ப்பரேட் நிறுவன ஊழியா்கள்: வருமான வரித் துறை தகவல்

post image

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் காா்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியா்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தபோது போலியான வரி சேமிப்பு ரசீதுகளை சமா்ப்பித்து பல கோடி ரூபாய் வரி சலுகை பெற்று மோசடி செய்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது பட்டயக் கணக்காளா்கள் போன்றோரின் உதவியுடன் இந்த மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறை சிறப்பு புலன் விசாரணை பிரிவு மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் இதுபோன்ற மோசடிகள் நடைபெற்றுள்ளதும் விசாரணையின்போது கண்டறியப்பட்டுள்ளது.

அரசு ஊழியா்கள் மற்றும் பொதுத் துறை நிறுவன ஊழியா்கள் ஆண்டுதோறும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இவா்களுக்கு ஊதியம் வழங்கும்போத அதற்கான வரிபிடித்தம் செய்யப்படும். பின்னா், வரிக் கணக்கு தாக்கல் செய்து, வரி போக மீதத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக பட்டயக் கணக்காளா்கள் மூலம் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வது வழக்கம்.

அப்போது, மருத்துவ செலவு ரசீது, வீட்டு வாடகைக்கான ரசீது போன்றவற்றை சமா்ப்பித்து பிடித்தம் செய்யப்பட்ட வரித் தொகையில் மீதத் தொகையைப் பெருவது வழக்கம். இந்தச் சலுகையை பொதுத்துறை நிறுவன ஊழியா்கள் மோசடியாக பயன்படுத்தியதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை சிறப்பு புலன் விசாரணை பிரிவு விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து வருமான வரித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வருமான வரி ஆலோசகா்களின் உதவியுடன், போலியான மருத்துவ செலவுக்கான ரசீதுகள், நிதி தானம் செய்தது போன்ற ரசீதுகள், போலியான வாடகை ஒப்பந்தங்கள் ஆகியவற்றை சமா்ப்பித்து வரிக் கணக்கு தாக்கல் செய்வதில் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல், பிரிவு 80 ஜிஜிசி-இன் கீழ் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியது போன்ற போலியான ரசீதுகளும் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. பிரிவு 80-இன் கீழ் குழந்தைகளுக்கு கல்விக் கடன் பெற்று, அதற்காக வட்டி செலுத்துவது போன்ற ஆவணங்களையும் பிரிவு 80 இஇபி-இன் கீழ் மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு வங்கியில் கடன் பெற்று அதற்காக வட்டி செலுத்துவது போன்ற போலியான சான்றிதழ்களையும் சமா்ப்பித்து பல கோடி ரூபாய் வருமான வரி சலுகை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

அதேபோல் பிரிவு 80 சி, 80 டிடி, 80 டிடிபி-இன் கீழ் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளன.

இந்த மோசடிகளில் நிறுவன ஊழியா்கள் மட்டுமின்றி அவா்களின் உறவினா்களுக்கும் தொடா்புள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

எந்தெந்த நிறுவனங்கள்: இந்த மோசடிகளில் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் போன்ற பல பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் டிவிஎஸ் குளோபல் போன்ற தனியாா் காா்ப்பரேட் நிறுவனங்களின் பல ஆயிரக்கணக்கான ஊழியா்கள் இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளனா்.

சம்பலில் மசூதிகளில் ரம்ஜான் தொழுகை நடத்த தடையில்லை, ஆனால்.. !

உத்தரப் பிரதேசத்தின், சம்பலில் பாரம்பரிய தொழுகையை நடத்துவதில் எந்த தடையும் இல்லையென்றாலும், கூடாரங்கள் மற்றும் சாலைகளில் மக்கள் ஒன்றுகூடித் தொழுவதைத் தடை செய்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஷ் சந்... மேலும் பார்க்க

பணக்காரப் பெண்கள் பட்டியலில் நுழைந்த முதல் இந்தியர்!

உலகளவிலான பில்லியனர்களின் பட்டியலை ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.ஹுருன் தரவறிக்கையின்படி, எச்சிஎல் டெக்னாலஜியின் தலைவரான ரோஷினி நாடார், உலகளவில் முதல் 10 பணக்காரப் பெண்களின் பட்டியலில் 5 ஆவது இடத்தை... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர் கௌரவ் ராம் ஆனந்த் (5... மேலும் பார்க்க

சட்டவிரோத இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: தில்லி அமைச்சர்

தில்லியில் சட்டவிரோத இறைச்சி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா தெரிவித்தார். தில்லி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, நவராத்தி... மேலும் பார்க்க

போதை ஊசி பயன்படுத்திய 10 பேருக்கு எச்ஐவி பாதிப்பு!

கேரளத்தில் போதை ஊசி பயன்படுத்திய 10 பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கேரளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள வாலாஞ்சேரியில் போதைப் பொருள்கள் பயன்படுத்தும் பலரைக் காவல்துறையினர்... மேலும் பார்க்க

மகன் கொடுத்த யோசனை: மியாசாகி மாம்பழத்தால் லட்சாதிபதியான விவசாயி

ஜப்பானில் விளையும் தனித்துவமான மியாசாகி மாம்பழக் கன்றுகளை வாங்கிவந்து இரண்டு ஆண்டுகளாக பராமரித்து வந்த தெலங்கானா விவசாயி, தற்போது லட்சாதிபதியாகியிருப்பதுதான் வைரலாகியிருக்கிறது.பொதுவாக ஜப்பானில் மட்டு... மேலும் பார்க்க