செய்திகள் :

பணக்காரப் பெண்கள் பட்டியலில் நுழைந்த முதல் இந்தியர்!

post image

உலகளவிலான பில்லியனர்களின் பட்டியலை ஹுருன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஹுருன் தரவறிக்கையின்படி, எச்சிஎல் டெக்னாலஜியின் தலைவரான ரோஷினி நாடார், உலகளவில் முதல் 10 பணக்காரப் பெண்களின் பட்டியலில் 5 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். முதல் 10 பணக்காரப் பெண்களின் பட்டியலில் நுழைந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையையும் ரோஷினி நாடார் கைப்பற்றினார்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் கடன்கள் அதிகரித்து, அவரது நிகர சொத்து மதிப்பில் ரூ. 1 லட்சம் கோடி கடந்தாண்டு குறைந்தது. இதன் எதிரொலியாக, உலகளவில் பணக்காரர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் வாய்ப்பை அம்பானி தவறவிட்டார். உலகளவில் 18 ஆவது இடத்தைப் பெற்றாலும், இந்திய அளவில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

ஹுருன் ஆய்வறிக்கையின்படி, உலகளவில் 3,442 பில்லியனர்கள் இருப்பதாகக் கூறுகிறது. மேலும், இந்தப் பட்டியலில் 163 பேர் புதிதாய் சேர்ந்ததன் மூலம், இந்த எண்ணிக்கை கடந்தாண்டைவிட 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்த பட்டியலின் உள்ளவர்களின் ஒட்டுமொத்த செல்வத்தில், இந்திய பில்லியனர்கள் 7 சதவிகிதம் பங்களிக்கின்றனர். முதல் 100 பணக்காரர்களில் இந்தியர்கள் 7 பேர் மட்டுமின்றி, இந்தியாவில் மட்டும் 284 பில்லியனர்கள் உள்ளனர்.

இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக மும்பையில் 90 பேர் உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தியாதான் குடும்ப வணிகங்களில் அதிக சதவிகிதத்துடன் முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிக்க:'இபிஎஸ் அவராகவே பதவி விலக வேண்டும்; இல்லையென்றால்...' - ஓபிஎஸ் எச்சரிக்கை!

ஸ்மார்ட்போன்களில் நேரம் செலவிடும் இந்தியர்களால் வருவாய் அதிகரிப்பு!

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வளர்ச்சியடைவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் எர்ன்ஸ் & யங்கின் ஆய்வில் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு த... மேலும் பார்க்க

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 7 பேர் காயம்

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒடிசா மாநிலம், மங்குலி அருகே நிர்குன்டியில் பெங்களூரு-காமாக்யா எக்ஸ்பிரஸ் ... மேலும் பார்க்க

தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்

தாணேயில் தடை செய்யப்பட்ட 238 கோடீன் இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் ஷில் டைகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் 22 வயது நபரைப் பி... மேலும் பார்க்க

புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் முதுகலை மாணவர் சடலம் மீட்பு

புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை முதுகலை மாணவரி... மேலும் பார்க்க

பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

பெங்களூரு ஏசி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அஸ்சாம் செல்லும் இந்த ரயில், ஒடிஸாவில் கட்டாக் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 11 பெட்... மேலும் பார்க்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், கோடைக்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்ட... மேலும் பார்க்க