செய்திகள் :

Sujatha Karthikeyan: விருப்ப ஓய்வு பெறும் ஒடிஷாவின் 'பவர்ஃபுல் IAS' - யார் இவர்?

post image

ஒடிஷாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா கார்த்திகேயன் விருப்ப ஓய்வு பெறுகிறார்.

கடந்த மார்ச் 13ம் தேதி மத்திய அரசு அவரது விருப்ப ஓய்வுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது. ஒடிஷா அரசு தேவையான அறிவிப்பை வெளியிட அறிவுறுத்தியுள்ளது. கட்டாய 3 மாத நோட்டீஸ் பீரியடையும் தள்ளுபடி செய்துள்ளனர்.

சுஜாதா கார்த்திகேயன் ஒடிஷா அரசின் சக்திவாய்ந்த அதிகாரியாக இருந்தவர். பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய ஆலோசகரான வி.கே. பாண்டியனின் மனைவியும் கூட.

Sujatha Karthikeyan

Sujatha Karthikeyan

சுஜாதா 2000ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் Political Science படித்துள்ளார். பின்னர் ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில் முதுநிலை பட்டம் பெற்றார்.

ஒடிஷாவில் மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட சுந்தர்கர் மாவட்டத்தில் அவரது பணி தொடங்கியது. அங்கு பல சமூக முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார். 2005ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

2006ம் ஆண்டில் சுந்தர்கர் மாவட்டத்தில் இவர் தொடங்கிய மதிய உணவில் முட்டை வழங்கும் திட்டம் பின்னாட்களில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

சுந்தர்கரின் மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்குமிக்க பகுதிகளில், இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் விளையாட்டுக்கான ஆர்வத்தை உருவாக்கினார். கால் பந்தையும் ஹாக்கியையும் பிரபலப்படுத்தியதால் இவருக்கு `ஃபுட்பால் கலெக்டர்' என்ற பெயர் உண்டு.

Voluntary Retirement

ஒடிஷாவில் பெண்களுக்கு வலிமையூட்டும் விதமாகத் தொடங்கப்பட்ட 'மிஷன் சக்தி' திட்டத்துக்குத் தலைமை தாங்கியது இவரது முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அவரது வழிகாட்டுதலில், இந்தத் திட்டத்தின் கீழ் 70 லட்சம் பெண்கள் பயன்பெற்றனர். பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கான (SHGs) கடன் இணைப்புகள் ஏழு ஆண்டுகளில், ரூ.500 கோடியிலிருந்து ரூ.15,000 கோடியாக அதிகரித்தது.

கட்டக் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியாளராக பதவியேற்றார் சுஜாதா. அங்கு கர்ப்பமான பெண்களுக்குக்காக மம்தா என்ற பணபரிமாற்றத் திட்டத்தைத் தொடங்கினார்.

கலாச்சார செயலாளராக பணியாற்றிய சிறிய காலகட்டத்தில், புவனேஸ்வரில் முதல் உலக ஒடியா மொழி மாநாட்டை நடத்தியதில் முக்கிய பங்காற்றினார்.

2023ம் ஆண்டு இவரது கணவர் வி.கே.பாண்டியன் ஐஏஎஸ் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். தேர்தலில் நவீன் பட்நாயக் மீது வி.கே.பாண்டியன் செல்வாக்கு செலுத்துவதாகப் பிரச்னையைக் கிளப்பியது பாஜக.

v.k.pandian, Naveen patnaik

கடந்த ஆண்டு தேர்தலை ஒட்டி, சுஜாதா கார்த்திகேயன் அலுவலகப் பதவியைத் தவறாகப் பயன்படுத்துவதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இவர் bjd கட்சியின் ஏஜென்ட் என விமர்சிக்கப்பட்டார்.

இதனால் தேர்தல் ஆணையம் அவரை அதிகாரமில்லாத பதவிக்கு மாற்ற வலியுறுத்தியது. மிஷன் சக்தியின் ஆணையர் மற்றும் செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டார் சுஜாதா.

தேர்தலில் bjd கட்சி தோல்வியைத் தழுவியதால் கட்சிக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் அழுத்தங்களை எதிர்கொண்டார் வி.கே.பாண்டியன். பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

கடந்த ஆண்டில் 6 மாதம் குழந்தை பராமரிப்பு விடுப்பு எடுத்த சுஜாதா கார்த்திக்கேயன், தனது விடுப்பை நீட்டிக்ககோரி அளித்த விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்தது. நவம்பர் மாதம் மீண்டும் அலுவலகத்தில் இணைந்தார்.

ஓய்வு பெறுவதற்கு முன்பு ஒடிஷாவின் நிதித்துறையில் சிறப்பு செயலாளராகப் பதவி வகித்துள்ளார்.

புதுச்சேரியில் தனியார் `பைக் டாக்சி’ சேவை - வரவேற்கும் மக்கள்; எதிர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்

சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்கு அயல் நாடுகளில் இருந்தும், அயல் மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். புதுச்சேரி அரசும் மாநில வருவாய்க்காக சுற்றுலாவுக்... மேலும் பார்க்க

`மாணவர்களுக்கு நாங்களும் தமிழ் கற்றுக்கொடுக்கிறோம்..!'- உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

தமிழக அரசு இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம் என்று உறுதியாகக் கூறி வருகிறது. ஆனால் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்க முடியாது என்று மிரட்டிக்க... மேலும் பார்க்க

குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்தாக மாறும் பட்னாவிஸ்!

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரங்கேறிவரும் புல்டோசர் கலாசாரம், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பரவிவருவது, பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது! யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.... மேலும் பார்க்க

`வெறுப்பை உமிழ்வதற்கல்ல சினிமா' - மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறை சீண்டும் கேரள சினிமாக்காரர்கள்

தற்போது, திரையில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள சினிமாவான ‘எம்புரான்’ படத்துக்கு, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் என்று காவிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. 'கோத்ரா கலவரப் பின்னணியைக் காட்டியுள... மேலும் பார்க்க

'என் அப்பா பணத்தை தவறான வழியில்...' - ஆதவ் அர்ஜூனா மீது லாட்டரி மார்ட்டின் மகன் கடும் விமர்சனம்

பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். விசிக திமுக கூட்டணியில் இருந்தபோதும் ஆதவ் அர்ஜூனா திமுக மீது தொடர்ந்து பல்வேற... மேலும் பார்க்க