செய்திகள் :

இந்தியா முழுவதும் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பு!

post image

இந்தியா முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுக்க 7,506.48 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கடந்தாண்டு மத்திய அரசு வெளியிட்ட தரவுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆக்கிரமிப்பில் உள்ள காடுகள் பற்றிய விவரங்களைச் சேகரிக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதுதொடர்பான அறிக்கை கடந்த வாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், மார்ச் 2024 வரை 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தமாக 13,05,668.1 சதுர கி.மீ காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில், ஆக்கிரமிக்கப்பட்ட காடுகளின் பரப்பளவு தில்லியை விட அதிகமாகும்.

இதுவரை அந்தமான் நிகோபார் தீவுகள், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், ஆந்திரம், சண்டிகர், தாதர் & நாகர், டாமன் டையூ, கேரளம், லட்சத்தீவு, மகாராஷ்டிரம், ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், சிக்கிம், மத்தியப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தரவுகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

பிகார், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம். ராஜஸ்தான், மேற்கு வங்கம், தெலங்காலா, நாகாலாந்து, தில்லி, ஜம்மு - காஷ்மீர், லடாக் போன்ற பகுதிகளில் இருந்து தரவுகள் சமர்ப்பிக்கப்படவில்லை.

காடு அல்லது அரசாங்கத்தால் காடாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் (மரங்கள் இல்லாவிட்டாலும்) உள்ளிட்ட பதிவு செய்யப்பட்ட வனப்பகுதிகள் அனைத்தும் இந்தக் கணக்கெடுப்பின் கீழ் வரும்.

பதிவு செய்யப்பட்ட வனப்பகுதிகள் 3 வகைப்படும். அவை, ரிசர்வ் காடுகள் (வேட்டையாடுதல், மேய்ச்சல் போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட்ட முழுமையான பாதுகாப்பு கொண்டவை), பாதுகாக்கப்பட்ட காடுகள் (சில நிபந்தனைகளுடன் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்), வகைப்படுத்தப்படாத காடுகள் (ரிசர்வ் அல்லது பாதுகாக்கப்பட்ட காடுகளின் கீழ் வராதவை).

மத்திய அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மார்ச் 2024 நிலவரப்படி அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 5,406.9 சதுர கி.மீ. அளவிலான காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

அசாமில் 3,620.9 சதுர கி.மீ காடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

கர்நாடகத்தில் 863.08 சதுர கி.மீ., தமிழ்நாட்டில் 157.68 சதுர கி.மீ., ஆந்திரத்தில் 133.81 சதுர கி.மீ., கேரளத்தில் 49.75 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 409.77 சதுர கி.மீ ஆக்கிரமிப்பு இதுவரை அகற்றப்பட்டுள்ளது.

கடந்தாண்டு முதல் மாநிலங்களுக்கு பலமுறை கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் மூலம் நினைவூட்டி, கடந்த நவம்பர் 11 அன்று கூட்டம் ஒன்றை நடத்தி இந்தத் தரவுகள் பெறப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | கண்ணி வெடிகளால் சூழப்பட்ட ஜார்க்கண்ட் காடுகள்!

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க

ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம ... மேலும் பார்க்க

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க