செய்திகள் :

ஹைதி: முக்கிய நகரத்தைத் தாக்கி 500 சிறைக் கைதிகளை விடுவித்த குழுக்கள்!

post image

ஹைதி நாட்டின் முக்கிய நகரத்தில் தாக்குதல் நடத்திய குற்றவாளி குழுக்கள் அங்குள்ள சிறையிலிருந்து சுமார் 500 சிறைக் கைதிகளை விடுவித்துள்ளனர்.

மத்திய ஹைதியின் மிரேபலாசிஸ் நகரத்தில் இரண்டு வெவ்வேறு குற்றவாளி குழுக்களைச் சேர்ந்த நபர்கள் அங்குள்ள சாலைகளில் சென்றவர்கள் மற்றும் கட்டடங்கள் மீதும் நேற்று (மார்ச் 31) துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அங்குள்ள மக்கள் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடியதில் அந்நகரமே பரபரப்பாக காட்சியளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய அந்தக் குழுக்கள் அப்பகுதியின் சிறைச்சாலையைத் தகர்த்து அதில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 500 சிறைக் கைதிகளை விடுவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது அந்த குழுக்களிடம் இருந்து மிரேபலாசிஸ் நகரத்தை மீட்டுள்ளதாக அந்நாட்டு காவல் துறை கூறியுள்ளது. இருப்பினும், சிறையிலிருந்து தப்பித்த சுமார் 500 கைதிகள் அந்நகரத்தின் தெருக்களில் சுற்றித் திரியலாம் எனவே மக்கள் பாதுகாப்போடு இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, ஹைதியின் தலைநகர் முழுவதும் குற்றவாளி குழுக்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் தற்போது நடைபெற்ற தாக்குதலின் மூலம் அவர்கள் புறநகர் பகுதிகளையும் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

மேலும், இந்தத் தாக்குதல் நடைபெற்ற மிரேபலாசிஸ் நகரமானது ஹைதியின் 2 முக்கிய சாலைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. அதில், ஒரு சாலை தலைநகர் போர்ட்-ஒ-பிரின்ஸிலிருந்து கடல் எல்லை வரை வடக்கிலிருந்து தெற்கிலும் மற்றொன்று மேற்கிலிருந்து கிழக்கேவுள்ள டோமினிகேன் குடியரசு நாடு வரையிலும் நீண்டுள்ளது.

இத்துடன், ஆள்களைக் கடத்தி பணம் பறிக்கும் 400 மவோஸோ என்ற குழுவும் மற்றும் கனான் நகரைக் கட்டுப்படுத்தும் தலிபான் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் மற்றொரு குழுவும் இணைந்து இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:போட்டியின் நடுவே மயங்கிய முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மரணம்!

3 மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்! ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்பு!

3 முக்கிய மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்றுள்ளது. மத்திய ஆசியாவைச் சேர்ந்த தஜிகிஸ்தான் குடியரசு, உஸ்பெகிஸ்தான் குடியரசு மற்றும் கிர்கிஸ்தான் குடியரசு ஆகிய நாடுக... மேலும் பார்க்க

ஆட்சிக் கவிழ்ப்பின்போது கைதான முக்கிய அதிகாரிகளை விடுவித்த நைஜர் ராணுவ அரசு!

நைஜர் நாட்டின் ராணுவ அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்த முக்கிய அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளை விடுதலை செய்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு ராண... மேலும் பார்க்க

யூத மதகுருவைக் கொலை செய்த 3 பேருக்கு மரண தண்டனை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் யூத மதகுருவின் கொலை வழக்கில் கைதான 3 உஸ்பெகிஸ்தான் நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மால்டோவா மற்றும் இஸ்ரேல் நாட்டு குடியுரிமைப் பெற்றவர் ஸ்வி கோகன் (வயது 28) , இவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ரமலான் விடுமுறையினால் அகதிகளை நாடு கடத்துவதில் தாமதம்!

பாகிஸ்தானில் ரமலான் விடுமுறையினால் லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகள் நாடு கடத்தப்படுவதற்கான காலக்கெடுவானது தாமதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகளுக்கு அந்ந... மேலும் பார்க்க

உள்நாட்டு பாதுகாப்பு கருதி 2 சிறார்களைக் கைது செய்த சிங்கப்பூர்! காரணம் என்ன?

சிங்கப்பூரில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சிறுமி மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் நாட்டில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவளித்த 1... மேலும் பார்க்க

ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 2 பெண் நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மண்டலா மாவட்டத்தில் பிச்சியா காவல் நிலையத்திற்குட்பட்ட ... மேலும் பார்க்க