செய்திகள் :

மகன் கொடுத்த யோசனை: மியாசாகி மாம்பழத்தால் லட்சாதிபதியான விவசாயி

post image

ஜப்பானில் விளையும் தனித்துவமான மியாசாகி மாம்பழக் கன்றுகளை வாங்கிவந்து இரண்டு ஆண்டுகளாக பராமரித்து வந்த தெலங்கானா விவசாயி, தற்போது லட்சாதிபதியாகியிருப்பதுதான் வைரலாகியிருக்கிறது.

பொதுவாக ஜப்பானில் மட்டுமே விளையும் இந்த மியாசாமி மாம்பழம், நிறத்தாலும் சுவையாலும் லட்சக் கணக்கில் விலை போகும் மாம்பழ வகையில் ஒன்றாக விளங்குகிறது.

தெலங்கானாவைச் சேர்ந்த சுமன்பாய் என்ற விவசாயியின் மகன் பிலிப்பின்ஸிலிருந்து மியாசாகி மாம்பழங்களை வாங்கி வந்து தனது தாயிடம் கொடுத்து வளர்க்குமாறு சொல்லயிருக்கிறார்.

கண்ணும் கருத்துமாக இரண்டு ஆண்டுகள் அந்த மாமரங்களைப் பராமரித்து வந்த விவசாயி, தற்போது அதில் விளைந்த மாம்பழங்களை நல்ல விலைக்கு விற்றுவருகிறார்.

போஸி கிராமத்தில், வளர்ந்துள்ள இந்த மியாசாமி மாம்பழங்கள் ஒன்று ரூ.10 ஆயிரம் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கடந்த வாரம் அப்பகுதியில் நடந்த வேளாண் கண்காட்சியில், இவரது மாம்பழங்கள்தான் பலரது கவனத்தையும் ஈர்த்து நல்ல வருவாய்க்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது.

யுபிஎஸ்இ தேர்வுக்கு தயாராக வந்த நந்த்கிஷோர், மியாசாகி மாம்பழங்கள் குறித்து அறிந்து, அதனை ஆன்லைன் மூலம் ஒரு மரக்கன்று ரூ.6,500 என்ற விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்.

அதனைப் பராமரிக்கும் விதம் என அனைத்தையும் ஆன்லைன் மூலம் அறிந்துகொண்டு அதற்கேற்ப பராமரித்துவந்துள்ளனர். ஜப்பானின் வெப்பநிலைக்கு ஏற்ப வளரும் இந்த மியாசாகி மாமரங்களை வெளியில் வளர்ப்பது மிகவும் கடினம் என்பதால், அதற்கு தகுந்தார் போல பல விஷயங்களையும் மாற்றியமைத்து மரம் வளர்க்கப்பட்டிருப்பதாகவும் இதுவரை 10 முதல் 12 மாம்பழங்கள் காய்த்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்மார்ட்போன்களில் நேரம் செலவிடும் இந்தியர்களால் வருவாய் அதிகரிப்பு!

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வளர்ச்சியடைவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் எர்ன்ஸ் & யங்கின் ஆய்வில் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு த... மேலும் பார்க்க

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 7 பேர் காயம்

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒடிசா மாநிலம், மங்குலி அருகே நிர்குன்டியில் பெங்களூரு-காமாக்யா எக்ஸ்பிரஸ் ... மேலும் பார்க்க

தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்

தாணேயில் தடை செய்யப்பட்ட 238 கோடீன் இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் ஷில் டைகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் 22 வயது நபரைப் பி... மேலும் பார்க்க

புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் முதுகலை மாணவர் சடலம் மீட்பு

புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை முதுகலை மாணவரி... மேலும் பார்க்க

பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

பெங்களூரு ஏசி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அஸ்சாம் செல்லும் இந்த ரயில், ஒடிஸாவில் கட்டாக் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 11 பெட்... மேலும் பார்க்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், கோடைக்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்ட... மேலும் பார்க்க