செய்திகள் :

சிலி அதிபர் இந்தியா வருகை!

post image

சிலி நாட்டு அதிபர் 5 நாள் பயணமாக இந்தியா வருகின்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று தென் அமெரிக்க நாடான சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக் ஃபொண்ட் 5 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 1 முதல் 5 ஆம் தேதி வரையிலான இந்தப் பயணத்தில் அதிபர் போரிக் உடன் சிலியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அதிகாரிகள், வணிகம் மற்றும் ஊடகம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, பதவியேற்ற பின்னர் முதல்முறையாக இந்தியா வரும் அதிபர் போரிக் வருகின்ற ஏப்ரல் 1 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருநாட்டு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மேலும், அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்தித்து பேசுவார் எனக் கூறப்பட்டுள்ள நிலையில் வருகை தரும் பிரதிநிதிகளுக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி சார்பில் மரியாதை நிமித்தமாக விருந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பயணத்தில் ஆக்ரா, மும்பை மற்றும் பெங்களூர் ஆகிய முக்கிய இந்திய நகரங்களுக்கு செல்லும் அதிபர் போரிக் அங்கு அரசியல், வர்த்தகம் மற்றும் தொழில் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

முன்னதாக, இந்தியா மற்றும் சிலி நாடுகளுக்கு இடையே பாரம்பரியமாக நட்புறவு கொண்டாடப்பட்டு வருகின்றது. கடந்த 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து சிலி மட்டுமே அதன் தூதரை அனுப்பியிருந்தது.

இத்துடன், பருவநிலை மாற்றம், தீவிரவாதம் உள்ளிட்ட சர்வதேச அளவிலான பிரச்னைகளில் இந்தியா மற்றும் சிலி ஆகிய இருநாடுகளும் ஒரே நிலைப்பாடைக் கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க