செய்திகள் :

சட்டவிரோத இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: தில்லி அமைச்சர்

post image

தில்லியில் சட்டவிரோத இறைச்சி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா தெரிவித்தார்.

தில்லி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, நவராத்திரி திருவிழாவிற்கு முன்னதாக நடைபாதைகளிலும் கடைகளிலும் வெளிப்படையாக இறைச்சி விற்கப்படுவது குறித்து பாஜக எம்எல்ஏ கர்னைல் சிங் கவலை தெரிவித்தார். அவருக்கு பர்வேஷ் வர்மா பதிலளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

நவராத்திரி விழாவுக்கு முன்னதாகவும், நவராத்திரி காலங்களிலும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாராவது சட்டவிரோதமாக இறைச்சி விற்பனை செய்தால் அவர்களின் கடை அகற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் தொகுதிகளில் ஆக்கிரமிப்பு சம்பவங்கள் ஏற்பட்டால் புகாரளிக்குமாறு எம்எல்ஏக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், நான் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடுவேன். தலைநகரில் சட்டவிரோத இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்களை அகற்ற ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வர்மா தெரிவித்தார்.

இதற்கு ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தேர்ந்தெடுத்து இதுபோன்ற செயல்களை அமல்படுத்துவதாகவும், பாஜகவுக்கு தைரியம் இருந்தால் நவராத்திரியின்போது பெரிய உணவகங்கள் மற்றும் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். ஒருபக்கம் முஸ்லிம்களுக்கு ஈத் பண்டிகைக்கான பெட்டகத்தை விநியோகித்து வரும் பாஜக, அன்றாடம் பிழைப்பை நடத்தும் இறைச்சி விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஸ்மார்ட்போன்களில் நேரம் செலவிடும் இந்தியர்களால் வருவாய் அதிகரிப்பு!

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வளர்ச்சியடைவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் எர்ன்ஸ் & யங்கின் ஆய்வில் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு த... மேலும் பார்க்க

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 7 பேர் காயம்

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒடிசா மாநிலம், மங்குலி அருகே நிர்குன்டியில் பெங்களூரு-காமாக்யா எக்ஸ்பிரஸ் ... மேலும் பார்க்க

தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்

தாணேயில் தடை செய்யப்பட்ட 238 கோடீன் இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் ஷில் டைகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் 22 வயது நபரைப் பி... மேலும் பார்க்க

புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் முதுகலை மாணவர் சடலம் மீட்பு

புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை முதுகலை மாணவரி... மேலும் பார்க்க

பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

பெங்களூரு ஏசி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அஸ்சாம் செல்லும் இந்த ரயில், ஒடிஸாவில் கட்டாக் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 11 பெட்... மேலும் பார்க்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், கோடைக்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்ட... மேலும் பார்க்க