செய்திகள் :

போதை ஊசி பயன்படுத்திய 10 பேருக்கு எச்ஐவி பாதிப்பு!

post image

கேரளத்தில் போதை ஊசி பயன்படுத்திய 10 பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கேரளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள வாலாஞ்சேரியில் போதைப் பொருள்கள் பயன்படுத்தும் பலரைக் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

பாலியல் தொழிலாளர்கள், போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் ஆகியோருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு சோதனை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தால் அவ்வப்போது நடத்தப்படுகின்றது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களுக்கு சோதனை நடத்தியதில் 3 வடமாநில தொழிலாளர்கள் உள்பட 9 பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இவர்கள் அனைவரும் ஒரே போதை ஊசியைப் பயன்படுத்தியதால் ஒருவருக்கு இருந்த பாதிப்பு அனைவருக்கும் ஏற்பட்டதாக பரிசோதித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் தேவையான சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்வதே எங்களின் குறிக்கோள் என மலப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி ரேணுகா தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | மகன் கொடுத்த யோசனை: மியாசாகி மாம்பழத்தால் லட்சாதிபதியான விவசாயி

ஸ்மார்ட்போன்களில் நேரம் செலவிடும் இந்தியர்களால் வருவாய் அதிகரிப்பு!

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வளர்ச்சியடைவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் எர்ன்ஸ் & யங்கின் ஆய்வில் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு த... மேலும் பார்க்க

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 7 பேர் காயம்

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒடிசா மாநிலம், மங்குலி அருகே நிர்குன்டியில் பெங்களூரு-காமாக்யா எக்ஸ்பிரஸ் ... மேலும் பார்க்க

தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்

தாணேயில் தடை செய்யப்பட்ட 238 கோடீன் இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் ஷில் டைகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் 22 வயது நபரைப் பி... மேலும் பார்க்க

புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் முதுகலை மாணவர் சடலம் மீட்பு

புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை முதுகலை மாணவரி... மேலும் பார்க்க

பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

பெங்களூரு ஏசி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அஸ்சாம் செல்லும் இந்த ரயில், ஒடிஸாவில் கட்டாக் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 11 பெட்... மேலும் பார்க்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், கோடைக்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்ட... மேலும் பார்க்க