செய்திகள் :

'அம்பானி முதலிடம்; அதானி அடுத்த இடம்!'- இந்திய பணக்காரர் பட்டியல் வெளியீடு; சொத்து மதிப்பு தெரியுமா?

post image

2023, 2024 என அடுத்தடுத்த ஆண்டுகளில், கௌதம் அதானிக்கு முறையே ஹிண்டன்பர்க் அறிக்கை, சோலார் பேனல் மோசடி போன்ற பிரச்னைகள் வந்தன. இருந்தும், அசராமல் அதில் இருந்து மீண்டு, இந்த ஆண்டு இந்தியாவின் டாப் பணக்காரர்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் அதானி.

ஹூருன் குளோபல் பணக்காரர்கள் பட்டியல், 2025 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சரிந்தும் முதலிடம்!

அதில் முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். என்னதான், அவர் முதல் இடத்தை பிடித்தாலும், அவருடைய சொத்து மதிப்பில் கடந்த ஆண்டு கிட்டதட்ட ரூ.1 லட்சம் கோடி சரிந்திருக்கிறது.

அம்பானி, அதானி சொத்து மதிப்பு தெரியுமா?
அம்பானி, அதானி சொத்து மதிப்பு தெரியுமா?

13% உயர்வு

இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அதானி நிறுவனத்தின் பங்கு கடந்த ஆண்டு பல சரிவுகளை சந்தித்திருந்தது. இருந்தும், கடந்த ஆண்டில், அவரது சொத்து மதிப்பு 13 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதனால், அம்பானிக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார் அதானி.

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.8.6 லட்சம் கோடி ஆகும்.

கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.8.4 லட்சம் கோடி ஆகும்.

அடுத்தடுத்த இடங்கள்

இதற்கு அடுத்தடுத்த இடங்களை ஹெச்.சி.எல்லின் ரோஷினி நாடார் (ரூ.3.5 லட்சம் கோடி), சன் பார்மசூட்டிகல் தொழிற்சாலைகளின் திலிப் சங்க்வி (ரூ.2.5 லட்சம் கோடி), விப்ரோவின் அசிம் பிரேம்ஜி (ரூ.2.2 லட்சம் கோடி) பிடித்துள்ளனர்.

இந்திய பணக்காரர்கள் பட்டியலின் டாப் 10 இடங்களில் ரோஷினி நாடார் முதல்முறையாக இடம்பிடித்துள்ளார்... அதுவும் மூன்றாம் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

Roshini Nadar: 'ஹூரூன் பட்டியலில் முதல் இந்தியப் பெண்' - வரலாறு படைத்த HCL தலைவர்; பின்னணி என்ன?

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரான ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, 2025 ம் ஆண்டுக்கான ஹுருன் உலக பெண் பணக்காரர்கள் பட்டியலில் (Hurun Global Rich List 2025 for women) இடம் பிடித்து வரலாறு படைத்துள்ளார்.டாப் 10 ... மேலும் பார்க்க

கச்சா எண்ணெய் இருப்பு உறுதி; 300 கி.மீட்டர் பரப்பளவில் கிணறுகள் அமைக்கும் ONGC.. உ.பி-க்கு ஜாக்பாட்!

இந்தியாவில் பெட்ரோல் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. மும்பை கடல் பகுதி, குஜராத், அஸ்ஸாம் போன்ற பகுதியில் அதிக அளவில் கிடைக்கிறது. இந்த நிலையில், புதிதாக உத்தரப்பிரதேச மாநிலம், பல்லி... மேலும் பார்க்க

தைவான் ஷூ உற்பத்தியாளர்களைத் தமிழ்நாடு ஈர்த்தது எப்படி?

தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பி ஜெயலட்சுமிக்கு சுமார் 15 மாதங்களுக்கு முன்பு வரை வாழ்க்கை துன்பமானதாகதான் தோன்றியது. தையல் தொழிலாளியான அவரது கணவரால், குடு... மேலும் பார்க்க

JCOM: தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய 7 கண்கள் என்னென்ன?

சர்வதேச அளவில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் JCI அமைப்பு, தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் JCOM (Jaycees chamber of commerce) மூலம் பயிற்சியளித்து வருகிறது. அந்த வகையில், JCOM L MADURAI 1.0 -இன் T... மேலும் பார்க்க

Career: பிசினஸ் தொடங்கப்போகிறீங்களா... உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய 7 கேள்விகள்!

இப்போது மக்கள் வேலைக்குச் செல்வதை விட, 'பிசினஸ்' செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். பிசினஸில் ஆர்வம் என்று எடுத்த உடனேயே, கண்ணை மூடிக்கொண்டு பிசினஸ் செய்வதற்கு இறங்கிவிடக்கூடாது. உங்களிடம் நீங்கள... மேலும் பார்க்க

'மின் கட்டணம் குறைவு'- தொழில்நுட்பத்தில் இயங்கும் மின்விசிறிகள்

தொழில்நுட்பத்தில் இயங்கும் மின்விசிறிகள் குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்குவதால் மின் கட்டணம் குறையும். ஆனால், 260 CMM (Cubic Meters per Minute) என்ற அளவில் காற்றை வீசக்கூடியது. இந்தியாவிலேயே இதுதான் அ... மேலும் பார்க்க