செய்திகள் :

கச்சா எண்ணெய் இருப்பு உறுதி; 300 கி.மீட்டர் பரப்பளவில் கிணறுகள் அமைக்கும் ONGC.. உ.பி-க்கு ஜாக்பாட்!

post image

இந்தியாவில் பெட்ரோல் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. மும்பை கடல் பகுதி, குஜராத், அஸ்ஸாம் போன்ற பகுதியில் அதிக அளவில் கிடைக்கிறது. இந்த நிலையில், புதிதாக உத்தரப்பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள சாகர்பலி என்ற கிராமத்தில் கச்சா எண்ணெய் இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 3 மாதங்களாக ஒ.என்.ஜி.சி அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர். சுதந்திர போராட்ட தியாகி சிட்டு பாண்டே என்பவரின் நிலத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சிட்டு பாண்டேயின் குடும்பத்திற்கு சொந்தமான ஆறரை ஏக்கர் நிலத்தை ஒ.என்.ஜி.சி நிர்வாகம் 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து இருக்கிறது.

இதற்காக ஆண்டுக்கு 10 லட்சம் வாடகை பேசப்பட்டுள்ளது. மூன்று மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கச்சா எண்ணெய் இருப்பது உறுதி செய்யப்பட்ட இடத்தில் ஒ.என்.ஜி.சி அதிகாரிகள் போர்போடும் வேலையை தொடங்கிவிட்டனர். இப்பணி அடுத்த மாதம் இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போரில் கச்சா எண்ணெய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனை சுற்றி 300 கிலோமீட்டர் தூரத்திற்குட்பட்ட பகுதியில் மேலும் சில போர்வெல் கிணறுகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் இப்பகுதி விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். அதோடு விவசாயிகளிடமிருந்து கூடுதல் விலைக்கு நிலத்தை ஒ.என்.ஜி.சி நிர்வாகம் வாங்க வாய்ப்பு இருக்கிறது.

பிரயக்ராஜ் வரை தோண்ட திட்டமிட்டுள்ளனர். தற்போது போர்போடுவதற்கு தினமும் 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது என்று ஒ.என்.ஜி.சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஒ.என்.ஜி.சி 5 ஆயில் மற்றும் கச்சா எண்ணெய் கிணறுகளை கண்டுபிடித்துள்ளது. 2021ம் ஆண்டு கணக்கெடுப்பு படி இந்தியாவில் 587.335 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு கச்சா எண்ணெய் இருப்பு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

Roshini Nadar: 'ஹூரூன் பட்டியலில் முதல் இந்தியப் பெண்' - வரலாறு படைத்த HCL தலைவர்; பின்னணி என்ன?

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரான ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, 2025 ம் ஆண்டுக்கான ஹுருன் உலக பெண் பணக்காரர்கள் பட்டியலில் (Hurun Global Rich List 2025 for women) இடம் பிடித்து வரலாறு படைத்துள்ளார்.டாப் 10 ... மேலும் பார்க்க

'அம்பானி முதலிடம்; அதானி அடுத்த இடம்!'- இந்திய பணக்காரர் பட்டியல் வெளியீடு; சொத்து மதிப்பு தெரியுமா?

2023, 2024 என அடுத்தடுத்த ஆண்டுகளில், கௌதம் அதானிக்கு முறையே ஹிண்டன்பர்க் அறிக்கை, சோலார் பேனல் மோசடி போன்ற பிரச்னைகள் வந்தன. இருந்தும், அசராமல் அதில் இருந்து மீண்டு, இந்த ஆண்டு இந்தியாவின் டாப் பணக்க... மேலும் பார்க்க

தைவான் ஷூ உற்பத்தியாளர்களைத் தமிழ்நாடு ஈர்த்தது எப்படி?

தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பி ஜெயலட்சுமிக்கு சுமார் 15 மாதங்களுக்கு முன்பு வரை வாழ்க்கை துன்பமானதாகதான் தோன்றியது. தையல் தொழிலாளியான அவரது கணவரால், குடு... மேலும் பார்க்க

JCOM: தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய 7 கண்கள் என்னென்ன?

சர்வதேச அளவில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் JCI அமைப்பு, தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் JCOM (Jaycees chamber of commerce) மூலம் பயிற்சியளித்து வருகிறது. அந்த வகையில், JCOM L MADURAI 1.0 -இன் T... மேலும் பார்க்க

Career: பிசினஸ் தொடங்கப்போகிறீங்களா... உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய 7 கேள்விகள்!

இப்போது மக்கள் வேலைக்குச் செல்வதை விட, 'பிசினஸ்' செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். பிசினஸில் ஆர்வம் என்று எடுத்த உடனேயே, கண்ணை மூடிக்கொண்டு பிசினஸ் செய்வதற்கு இறங்கிவிடக்கூடாது. உங்களிடம் நீங்கள... மேலும் பார்க்க

'மின் கட்டணம் குறைவு'- தொழில்நுட்பத்தில் இயங்கும் மின்விசிறிகள்

தொழில்நுட்பத்தில் இயங்கும் மின்விசிறிகள் குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்குவதால் மின் கட்டணம் குறையும். ஆனால், 260 CMM (Cubic Meters per Minute) என்ற அளவில் காற்றை வீசக்கூடியது. இந்தியாவிலேயே இதுதான் அ... மேலும் பார்க்க