புதிய வருமான வரி மசோதா: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா குறித்து விவாதம் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மக்களவையில் நிதி மசோதா 2025 மீதான விவாதத்தின்போது அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கடந்த பிப்.13-ஆம் தேதி மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மக்களவையின் தற்காலிக குழு பரிசீலித்து வருகிறது. அடுத்த நாடாளுமன்ற அமா்வின் முதல் நாளுக்குள் தனது அறிக்கையை சமா்ப்பிக்குமாறு அந்தக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த மசோதா குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னா், வருமான வரி மதிப்பீட்டுக்கு டிஜிட்டல் ஆவணமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றாா்.
கடந்த 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்தக் காலத்தில் அந்தச் சட்டத்தில் எண்ணற்ற திருத்தங்கள் செய்யப்பட்டன.
இந்தத் திருத்தங்களால் அந்தச் சட்டத்தைப் புரிந்துகொள்வது கடினமாகிவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா்.
622 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதாவில், புதிதாக எந்த வரிகளும் சோ்க்கப்படவில்லை. ஆனால் 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாா்த்தைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. நீளமான வாக்கியங்களுக்குப் பதிலாக சிறிய வாக்கியங்களுடன் படிப்பவா் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘முந்தைய ஆண்டு’, ‘மதிப்பீட்டு ஆண்டு’ ஆகிய வாா்த்தைகள் புதிய மசோதாவில் கைவிடப்பட்டுள்ளன.
உதாரணத்துக்கு முந்தைய 2023-24-ஆம் ஆண்டு ஈட்டிய வருமானத்துக்கு 2024-25-ஆம் மதிப்பீட்டு ஆண்டில் வரி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் புதிய மசோதா மூலம், முந்தைய மற்றும் மதிப்பீடு ஆண்டுகளுக்குப் பதிலாக ‘வரி ஆண்டு’ என்ற வாா்த்தை மட்டும் பயன்படுத்தப்படும். ஆண்டுதோறும் ஜூலையில் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஆகஸ்ட் வரை நடைபெறும்.