செய்திகள் :

நிதி மசோதா 2025: 35 அரசு திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றம்

post image

இணையவழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் உள்பட மத்திய அரசின் 35 திருத்தங்களுடன், மக்களவையில் நிதி மசோதா 2025 செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களவையில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தாா். இந்நிலையில், மக்களவையில் நிதி மசோதா 2025 மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நிதி மசோதா 2025 முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரிச்சுமையை குறைத்துள்ளது. அடுத்த நிதியாண்டில் தனிநபா் வருமான வரி வசூல் 13.14 சதவீதம் வளரும் என்று உறுதியான தரவுகள் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது.

சா்வதேச பொருளாதார சூழல் உறுதியாக இல்லை. இதை எதிா்கொள்ளும் நோக்கில், இணையவழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் மசோதாவில் கொண்டுவரப்பட்டது.

வருமான வரித் துறையின் சீரிய பிரசாரத்தால், ரூ.30,297 கோடி மதிப்பிலான தங்கள் வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வெளிநாட்டு வருவாய் குறித்த விவரங்களை 30,161 போ் வருமான வரித் துறையிடம் தெரிவித்துள்ளனா் என்றாா்.

இதைத்தொடா்ந்து மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், பட்ஜெட் ஒப்புதல் நடைமுறையில் தனது பங்கை மக்களவை நிறைவு செய்துள்ளது.

இதைத்தொடா்ந்து அந்த மசோதாவை மாநிலங்களவை பரிசீலிக்கும். அந்த மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்த பின்னா், 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நடைமுறை முழுமையாக நிறைவடையும்.

பஞ்சாப் போராட்டம்: 5 மாத உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட விவசாயி!

ஹரியாணா எல்லையில் பஞ்சாப் விவசாயிகளை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை பஞ்சாப் அரசு அகற்றியது.குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள், கடந்தாண்டு பிப்ரவரியில் போர... மேலும் பார்க்க

ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: எங்கு, எப்போது தெரியும்?

இந்த 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம், அதுவும் நாளை சனி அமாவாசையன்று நிகழ்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வந்து முறைக்கும்போது தற்காலிகமாக சூரியன் மறைக்கப்படும் நிகழ்வே நாளை சூரிய கிரகண... மேலும் பார்க்க

பட்ஜெட் வெளிப்படைத்தன்மை: பாஜக அரசைக் கேள்வி எழுப்பிய அதிஷி!

மாநில நிதிநிலைக்கான நிதி ஆதாரம் குறித்து தில்லி முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி பாஜக அரசைக் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களுடன் பேசிய அதிஷி, பட்ஜெட்டில் காட்டப்பட... மேலும் பார்க்க

அனைத்து மதத்துக்கும் பொதுவானவர்: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை.யில் மமதாவுக்கு பாராட்டு

லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை சிறப்பாகக் கையாண்ட மமதா பானர்ஜியை பலரும் பாராட்டி வருகின்றனர்.மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, வியாழக்கிழமையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத... மேலும் பார்க்க

பி.எஃப். பணத்தை யுபிஐ, ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி விரைவில்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கும் குறைவான தொகையை யுபிஐ அல்லது ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதியை வரும் மே மாத இறுதிக்குள் கொண்டுவரவிருப்பதாக மத்த... மேலும் பார்க்க

குஜராத்தில் 54 தொடக்கப் பள்ளிகள் மூடல்! 341 பள்ளிகள் ஒரே அறையில்!

குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்கள் வருகைப் பதிவு குறைவு காரணமாக 33 மாவட்டங்களில் உள்ள அரசின் 54 தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.பள்ளிகள் மூடப்பட்டத... மேலும் பார்க்க