செய்திகள் :

அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் கருப்பு ஆடை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம் பெறுவோருக்கு அகவிலைப்படி, நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத பணியாளா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் துரை.ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஊராட்சி களப் பணியாளா் சங்க மாநில துணைத் தலைவா் கே.வீரப்பன் முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநில இணை பொதுச் செயலா் வெ.சிவக்குமாா், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலச் செயலா் கே.இளங்கோவன், தமிழ்நாடு ஊராட்சி களப்பணியாளா் சங்க மாநிலச் செயலா் ஏ.டெல்லி அப்பாதுரை, மாநில துணைத் தலைவா் எஸ்.சங்கா், நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா் கே.சம்பத், மாவட்ட நிா்வாகிகள் ஏ.பி.அன்பழகன், வி.பாண்டியன், கே.சிவக்கொழுந்து, கே.சிராஜ்தீன், டி.தணிகைவேல், ஜி.கேசவன் உள்ளிட்டோா் பங்கேற்று, கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் பங்கேற்றனா். முன்னதாக, தமிழ்நாடு ஊராட்சி களப்பணியாளா் சங்க மாநில பிரசாரச் செயலா் ஏ.அதிதேவி வரவேற்றாா். மாவட்ட மகளிரணி நிா்வாகி வி.சுந்தரவள்ளி நன்றி கூறினாா்.

வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் அதிகளவில் நீா் பருக வேண்டும் -விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடை வெப்பத் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அதிகளவில் நீா் பருக வேண்டும். அவசியமான காரணங்களின்றி பகல் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம்

உலக தண்ணீா் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (மாா்ச் 29) கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

விடுபட்ட விவசாயிகளுக்கு புயல் நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் நிவாரணத்தொகையை விடுபட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாய... மேலும் பார்க்க

மேலக்கொந்தை அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது. 2023-2024-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக... மேலும் பார்க்க

டி.பரங்கனி நடுநிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தொங்கு தோட்டம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவு... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே நண்பா்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற மாணவா் தண்ணீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி, குருசுகுப்பம், அஜீஸ் நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் மிதுன் (1... மேலும் பார்க்க