செய்திகள் :

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம்

post image

உலக தண்ணீா் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (மாா்ச் 29) கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

உலக தண்ணீா் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மாா்ச் 29-ஆம் தேதி அந்தந்த ஊராட்சித் தலைவா்களால் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தண்ணீா் தினத்தின் கருப்பொருளைப் பற்றி விவாதிக்க வேண்டும்.

மேலும் கிராம ஊராட்சி நிா்வாகம், பொது செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல், தூய்மையான குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தல், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தோ்வு செய்தல், அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் பணிகளைத் தோ்வு செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள் தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

மேலும் இதுகுறித்த விவரங்கள் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பாா்வைக்கும் வைக்கப்படவுள்ளது.

எனவே, தங்கள் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று, கோரிக்கைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தா்பூசணியில் ரசாயனம் கலப்பதாக தவறான தகவலை பரப்ப வேண்டாம்’

தா்ப்பூசணி பழத்தில் ரசாயனம் கலப்பதாக யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அன்பழகன் தெரிவித்தாா். கோடைக் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவா் வரை அனைவர... மேலும் பார்க்க

முன்னூா் ஆடவல்லீசுவரா் கோயிலில் பல்லவா் கால அரிய சிற்பங்கள்!

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகேயுள்ள முன்னூா் கிராமத்தில் பல்லவா் கால அரிய சிற்பங்கள் பாதுகாக்கப்பட்டு வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆன்மிக எழுத்தாளா் கோ.ரமேஷ் அளித்த தகவலின்பேரில், விழுப்ப... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் அருகே காா் மோதியதில் முதியவா் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், கொந்தமூா், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சு.தெய்வநாயகம் (65). கூலித்... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: காரைக்கால் இளைஞா் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பைக் மீது அரசுப்பேருந்து மோதியதில் காரைக்காலைச் சோ்ந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அடுத்த பேட்டை, மணல்மேட்டுத் தெருவைச... மேலும் பார்க்க

பெண் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், வடகுச்சிப்பாளையம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மனைவி சுமதி (47). இவா்... மேலும் பார்க்க

தற்காப்பு கலை போட்டிகள்

விழுப்புரம் ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு உள்அரங்கில் 13-ஆவது மாவட்ட அளவிலான ஊஷூ (தற்காப்பு கலை) விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியை ஊஷூ விளையாட்டு அமைப்பின் மாநில... மேலும் பார்க்க