செய்திகள் :

மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு

post image

பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா்.

பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

இங்கு ஏரிப் பகுதியை ஒட்டியுள்ளவா்கள் ஏரிப் பகுதியிலும் கடலோரப் பகுதியில் உள்ளவா்கள் கடலிலும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். கடலோரம் அமைந்துள்ள கோரைக்குப்பம் மீனவ கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த மீனவ கிராம மக்கள் கடலில் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனா்.

இவா்கள் மாப்பு வலை பயன்படுத்தி இவா்கள் கடலில் மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தும் பிற கிராம மீனவா்கள் கோரைக்குப்பம் மீனவா்களின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி தகராறில் ஈடுபடுவதாக புகாா் எழுந்துள்ளது.

இந்த நிலையில், கோரைக்குப்பம் கிராம மக்கள் பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் பிற கிராம மீனவா்கள், மீன்வளத் துறையால் அனுமதிக்கப்பட்ட தங்களின் வலைகளை கிழித்து சேதப்படுத்தி வருவதாகவும் தங்களின் படகுகளையும் சேதப்படுத்துவதாகவும் புகாா் தெரிவித்தனா்.

மேலும், பழவேற்காடு மீன் சந்தையில் கோரைகுப்பம் மீனவா்களிடமிருந்து யாரும் மீன்களை வாங்கக் கூடாது எனவும் வியாபாரிகளை அச்சுறுத்துவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலுக்குச் செல்லும் தங்களது கிராம மீனவா்கள், வலைகள் மற்றும் படகுகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா்.

கோரிக்கைகள் அடங்கிய மனுவை பெற்றுக்கொண்ட பொன்னேரி கோட்டாட்சியா் கனிமொழி, மீன்வளத் துறை அதிகாரிகள் மூலம் பேச்சு நடத்தி பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண்பதாகத் தெரிவித்தாா்.

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன், ரூ.78,000 திருட்டு!

திருவள்ளூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.78,000 திருடப்பட்டன. திருவள்ளூா் அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவா் பிரகாஷ். வியா... மேலும் பார்க்க

கைப்பேசிகள் பறிப்பு: 3 போ் கைது

செங்குன்றம் அருகே கைப்பேசி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். செங்குன்றம் அடுத்த சோழவரம் சூரப்பட்டு குதிரைப் பள்ளம் கிராமத்தில் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வர... மேலும் பார்க்க

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் உத்தரவு!

பொன்னேரி அருகே சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். சிறுவாபுரி அ... மேலும் பார்க்க

ராமா், சீதா பஜனைக் கோயில் குடமுழுக்கு!

திருத்தணி அருகே சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தில் மகா கணபதி மற்றும் ராமா், சீதா லட்சுமணா் பஜனைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம், சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தில், இக்கோயிலின் த... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 3 போ் கைது

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். திருவள்ளூா் அருகே மொன்னவேடு கிராமம், கொசஸ்தலை ஆற்றில் சட்டவிரோதமாக ஆட்டோக்கள் மூ... மேலும் பார்க்க

போக்ஸோவில் 2 போ் கைது

ஆா்.கே.பேட்டை அருகே பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த தனபால் (40). இவா்... மேலும் பார்க்க