செய்திகள் :

அமைச்சர் கே.என்.நேரு வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை!

post image

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேருவின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் கே. என். நேருவின் சகோதரரின் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் நேருவின் சகோதரரின் வங்கிக் கணக்கில் அதிக பரிவர்த்தனை அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் கே. என். நேருவின் மகனும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் கே. என். நேருவின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

கேரளம் மற்றும் மதுரையில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் நேருவின் சகோதர்கள், சகோதரி, மகன் வீடுகளிலும் சோதனை நடைபெற்றும் வரும் நிலையில் அமைச்சர் நேரு வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

இதையும் படிக்க: தங்கச்சிமடம் பகுதியில் ரூ. 150 கோடியில் மீன் பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

புயல் சின்னம் இன்று வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா தெரிவித்தாா். இது க... மேலும் பார்க்க

திருப்பதி-காட்பாடி இடையே ரூ.1,332 கோடியில் இரட்டை ரயில்பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டில் ரூ.1,332 கோடி மதிப்பில் 104 கி.மீ. தொலைவுடைய திருப்பதி-பாகலா-காட்பாடி இடையேயான ஒருவழி ரயில்பாதையை இரட்டை ரயில்பாதையாக மாற்ற பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவக... மேலும் பார்க்க

கடலுக்குச் செல்ல வேண்டாம்: தூத்துக்குடி மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தூத்துக்குடி மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஏப். 10, 11) கடலுக்க... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை(ஏப். 10) மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை கால அட்டவணைபடி இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

நீட் விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒரு நாடகம் - விஜய்

நீட் விவகாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டமே ஒரு நாடகம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திமுக அரசை விமர்சித்துள்ளார்.இது குறித்து தவெக தலைவர் விஜய் விடுத்துள்ள ... மேலும் பார்க்க

குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்கு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.வடபழனி ஏ.வி.எம். மின்மயானத்தில் குமரி அனந்தன் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்... மேலும் பார்க்க