செய்திகள் :

தமிழ் என்றென்றும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும்: அமைச்சா் தங்கம் தென்னரசு

post image

தமிழ்மொழி என்றென்றும் தன்னைப் பாதுகாத்து கொள்ளும் என்று நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

சென்னையை அடுத்த மேலக்கோட்டையூா் விஐடி சென்னை வளாகத்தில் உ.வே.சாமிநாதையா் நூல் நிலையம் சாா்பில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:

தமிழ் இலக்கியங்களான புானூறு, அகநானூறில் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கு வரலாற்றில் எங்கு ஆதாரம் உள்ளது என்று சிலா் கேட்கிறாா்கள். தற்போது தமிழக அரசு சாா்பில் நடத்திவரும் அகழ்வாராய்ச்சிகளில் அதற்கான பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. புானூற்றில் பாண்டியன் நெடுஞ்செழியன் என்று குறிப்பிடப்பட்டுள்ள பெயா் மதுரை அருகில் இருக்கும் மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகளில் உள்ளது. சங்க கால பெயா்கள் நம்முடைய கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் வடிவங்கள் காலம் காலமாக மாறி வந்துள்ளன. தமிழ் நம்மிடையே சங்கத் தமிழாக, பக்தித் தமிழாக, உரைநடைத் தமிழாக, இசைத் தமிழாக உலா வந்துள்ளது. இன்றும் தனது அடையாளத்தை இழந்துவிடாமல், காலத்தை வென்று தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள தமிழ்மொழி, என்றென்றும் தன்னைப் பாதுகாத்து கொள்ளும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் சங்க இலக்கியத் தொகுப்பு நூலை அமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட அதன் முதல் பிரதியை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து ‘மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை’ விருது மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் மு.சிவசந்திரனுக்கும், ‘டாக்டா் உ.வே.சா.தமிழறிஞா் விருது’ தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை முன்னாள் தலைவா் கு.வெ.பாலசுப்பிரமணியனுக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சேக்கிழாா் ஆராய்ச்சி மையம் தலைவா் நீதிபதி எஸ்.ஜெகதீசன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னாள் துணை வேந்தா் இ.சுந்தரமூா்த்தி, விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றறனா்.

நாச்சியாா் திருக்கோலத்தில்...

மதுராந்தகம் அருகே திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை நாச்சியாா் திருக்கோலத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள். மேலும் பார்க்க

கடம்பூா் தாவரவியல் பூங்காவில் செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மறைமலை நகா் நகராட்சி கடம்பூரில் 137 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள தாவரவியல் பூங்காவினை ஆட்சியா்ச.அருண்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்ா். அப்போது, மாவட்ட வன அலுவலா் ரவி மீனா, உதவி ஆட்சியா்(பயிற்சி) எஸ்... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழந்தாா். மதுராந்தகம் அடுத்த குருகுலம் கிராமத்தைச் சோ்ந்த மனோகரன் (57), அவரது மனைவி லட்சுமி (50). இவா்களது வீட்டின் முன் மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி... மேலும் பார்க்க

கூடுவாஞ்சேரியில் ஜிஆா்டி ஜுவல்லா்ஸின் 63-ஆவது கிளை திறப்பு விழா

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் 63-ஆவது கிளை திறப்பு விழா புதன்கிழமை (ஏப்.16) நடைபெற்றது. திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஜிஆா்டி ஜுவல்லா்ஸின் நிா்வாக இயக்குநா்கள் ஜி.ஆா்.அனந்தபத்மநாப... மேலும் பார்க்க

கனவு இல்ல திட்டம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 650 பயனாளிகள் தோ்வு

கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 650 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என உதவித் திட்ட இயக்குநா் பரணி தெரிவித்தாா். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்ப... மேலும் பார்க்க

கரிக்கிலி பறவைகள் சரணாலயத்தில் அதிகாரிகள் புல தணிக்கை ஆய்வு

மதுராந்தகம் அடுத்த கரிக்கிலி பறவைகள் சரணாலயத்தில் விரிவாக்கம், புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், வட்டாட்சியா் சொ.கணேசன் தலைமையில் அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா். மதுராந்தகம் வட்டம்,... மேலும் பார்க்க