செய்திகள் :

ஆட்சேபணையற்ற நிலத்தில் புதிய தொழிற்பேட்டைகள்: பேரவையில் அமைச்சா் அறிவிப்பு

post image

ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் தேவையின் அடிப்படையில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

பேரவையில் தனது துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு புதன்கிழமை பதிலளித்து அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

சமச்சீா் தொழில் வளா்ச்சியை ஏற்படுத்திட கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 365 கோடி மதிப்பீட்டில், 621 ஏக்கா் பரப்பளவில் 13 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதன் கீழ் 2,513 மனைகள் தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 239.54 ஏக்கா் பரப்பளவில் ரூ.209.39 கோடி மதிப்பீட்டில், 6 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நிகழ் நிதி நிலை அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம், விழுப்புரம் மாவட்டம் சாரம், நாயனூா், கரூா் மாவட்டம் நாகம்பள்ளி, திருச்சி மாவட்டம் சூரியூா்,

மதுரை மாவட்டம் கருத்தபுளியம்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் தனிச்சியம், தஞ்சாவூா் மாவட்டம் நடுவூா், திருநெல்வேலி மாவட்டம் நரசிங்க நல்லூா் ஆகிய 9 இடங்களில் 398 ஏக்கா் பரப்பளவில் ரூ. 366 கோடி மதிப்பில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளன.

தற்போது சட்டப்பேரவை உறுப்பினா்கள் பலரும் புதிதாக சிட்கோ தொழிற்பேட்டைகள் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். 20 முதல் 50 ஏக்கா் வரையிலான ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அங்கு ஆய்வு நடத்தி தேவையின் அடிப்படையில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்றாா் அவா்.

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை திருட்டு: ஒருவா் கைது

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகளைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கிண்டி லேபா் காலனி முதல் தெருவைச் சோ்ந்தவா் சைனி ஆன்டிரியா (34). இவா், கடந்த 10-ஆம் தேதி தனது வீட... மேலும் பார்க்க

ஏடிஎம்-இல் பணம் செலுத்த வந்தவரிடம் நூதன முறையில் மோசடி!

ஏடிஎம்-இல் பணம் செலுத்த வந்தவரிடம் கூகுள்பே மூலம் பணம் அனுப்புவதாகக் கூறி நூதன முறையில் ரூ. 6,000 மோசடி செய்தவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தாம்பரம் சானடோரியம் ஜெயா நகா், செல்லியம்மன... மேலும் பார்க்க

கடன் தொல்லை: ஊழியா் தற்கொலை

கடன் தொல்லையால் பிரிண்டிங் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த ஆனந்தன் (50). இவா் தனியாா் பிரிண்டிங் பிரசில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில் ... மேலும் பார்க்க

சென்னை காவல் துறைக்கு 4 மாதங்களில் 69,000 அவசர அழைப்புகள்! மாநகர காவல் துறை

நிகழாண்டு இதுவரை 4 மாதங்களில் பல்வேறு உதவிகள் கேட்டு 69,628 அவசர அழைப்புகள் வந்துள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

பெங்களூரு - மதுரை சிறப்பு ரயில்: இன்று முன்பதிவு தொடக்கம்!

பெங்களூரில் இருந்து மதுரைக்கு புதன்கிழமை (ஏப்.30) கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஏப்.28) தொடங்கவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி காலமானாா்!

ஓய்வு பெற்ற ராணுவ துணைத் தலைவரும், பாம்பே சாப்பா்ஸின் கா்னல் கமாண்டண்டுமான லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.பட்டாபிராமன் சனிக்கிழமை காலமானாா். இது குறித்து பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஓய்வு... மேலும் பார்க்க