செய்திகள் :

ஸ்பெயின், போர்ச்சுகலில் மின் தடையால் இருளில் தவிக்கும் மக்கள்: ரயில், சாலை போக்குவரத்து பாதிப்பு!

post image

ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் திங்கள்கிழமை(ஏப். 28) திடீரென மின் விநியோகம் தடைபட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.

’தொழில்நுட்பக் கோளாறுகளால் மின் விநியோகம் தடைபட்டுள்ளதைத் தொடர்ந்து, மின் விநியோகத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மின் உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து எடுத்து வருவதாக’ ஸ்பெயினின் ‘ரெட் எலக்ட்ரிகா’ மின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறுகளால், ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸின் சில பகுதிகளில் திங்கள்கிழமை மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக போர்ச்சுகலை சேர்ந்த மின்சார விநியோக கண்காணிப்பு நிறுவனமான ’இ-ரெடீஸ்’ தெரிவித்திருக்கிறது.

ஸ்பெயில் தலைநகர் மேட்ரிட், போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் உள்பட பல்வேறு நகரங்களிலும் மின் தடையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால் போர்ச்சுகலில் லிஸ்பன், போர்ட்டோ நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாததால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் மின் தடையால் விமான சேவை பாதிக்கப்படாமலிருக்க ஜெனரேட்டர்கள் உதவியுடன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் மின் தடையால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் தேசிய ரயில்வே நிறுவனமான ’ரென்ஃபே’ வெளியிட்டுள்ள தகவலின்படி, உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணியளவில் ஸ்பெயினில் ஒட்டுமொத்தமாக மின் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்களின் புறப்பாடு நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மின் தடையால் டென்னிஸ் போட்டியும் நிறுத்தப்பட்டுள்ளது.

மின் தடையால் பல பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளும் முடங்கியுள்ளன. ஃபோன் அழைப்புகளை மேற்கொள்ள முடியாததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டாலும், சமூக வலைதளங்கள் சில செயல்படுவதால் அவற்றின் மூலம் மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை தொடர்புகொண்டு பேசி வருகின்றனர்.

உக்ரைன் மீது 3 நாள்கள் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் அறிவிப்பு!

உக்ரைன் மீதான போரை 3 நாள்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் ரஷிய அதிபா... மேலும் பார்க்க

ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகலில் வரலாறு காணாத மின் தடை!

ஸ்பெயின் நாடு முழுவதும், போச்சுக்கலின் பெரும்பகுதிகள், பிரான்ஸ் நாட்டில் பல பகுதிகளில் இன்று வரலாறு காணாத மின் தடை ஏற்பட்டிருப்பதால் மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாகியிருக்கிறார்கள்.ஸ்பெயின் மற்றும் ப... மேலும் பார்க்க

வான்வெளியைப் பயன்படுத்தத் தடை: மிகப்பெரிய இழப்பை சந்தித்த பாகிஸ்தான்!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகக் கருதி தங்களது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்த பாகிஸ்தான் கோடிக்கணக்கில் நஷ்டத்தை எதிர்கொண்டு... மேலும் பார்க்க

அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 30 பேர் பலி!

ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறையின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதில், 30 பேர் கொல்லப்பட்டதாக யேமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹவுத்திகளின் கோ... மேலும் பார்க்க

கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா்: 9 போ் உயிரிழப்பு!

கனடாவின் வான்கூவா் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா் மோதியதில் 9 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். 16-... மேலும் பார்க்க

உக்ரைன் மீது தொடரும் ரஷியாவின் ‘ட்ரோன்’ தாக்குதல்!

உக்ரைன் நாடு முழுவதும் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து சனிக்கிழமை நள்ளிரவில் 149 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) ஏவி ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில... மேலும் பார்க்க