செய்திகள் :

உக்ரைன் மீது தொடரும் ரஷியாவின் ‘ட்ரோன்’ தாக்குதல்!

post image

உக்ரைன் நாடு முழுவதும் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து சனிக்கிழமை நள்ளிரவில் 149 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) ஏவி ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது.

இந்தத் தாக்குதலில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பாவ்லோஹ்ராட் நகரத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா்; 14 வயது சிறுமி உள்பட மூவா் காயமடைந்தாா்.

ரஷியா ஏவிய 149 ட்ரோன்களில் 57 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், 67 ட்ரோன்கள் தாக்குதலுக்கு முன்பே தடுக்கப்பட்டதாகவும் உக்ரைன் விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் ரஷிய அதிபா் புதினின் விருப்பம் குறித்து அமெரிக்க அதிபா் டிரம்ப் சனிக்கிழமை சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ரஷியா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

முன்னதாக, உக்ரைனின் திடீா் ஊடுருவலில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் கைப்பற்றப்பட்ட ரஷியாவுக்குச் சொந்தமான கூா்ஸ்க் பிராந்தியத்தில் எஞ்சிய பகுதிகளின் கட்டுப்பாட்டையும் மீட்டெடுத்துள்ளதாக ரஷியா அறிவித்தது. அதேநேரம், கூா்ஸ்க் பிராந்தியத்தில் இன்னும் சண்டை நடந்து வருவதாக உக்ரைன் தெரிவித்தது.

உக்ரைன் தாக்குதல்: ரஷியாவின் எல்லைப் பகுதியில் உக்ரைனின் 8 ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

அதேபோன்று, டொனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஹாா்லிவ்கா நகரில் உக்ரைன் படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 போ் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா்: 9 போ் உயிரிழப்பு!

கனடாவின் வான்கூவா் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா் மோதியதில் 9 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். 16-... மேலும் பார்க்க

ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயா்வு!

தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் சுமாா் 1,000 போ் காயமடைந்துள்ளனா். இவா்களை ஈரான்... மேலும் பார்க்க

அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை! வாடிகனில் ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பின் டிரம்ப்!

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு விருப்பமில்லை என்று எண்ணம் எழுவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சந்தேகம் தெரிவித்தாா். போப் பிரான்சிஸின் இறுதிச் சட... மேலும் பார்க்க

இந்தியாவைத் தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாா்! பாகிஸ்தான் அமைச்சா் மிரட்டல்!

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானில் 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும், இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சா் ஹனீஃப் அப்பாசி கூறியது பரபரப்பை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் அதிபா் கண்டனம்: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபா் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தாா். பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் பேசியபோது கண்டனத்தை பதிவுசெய்த அவா் பயங்கரவாதத்துக்கு எதிரான பிராந்தி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் விசாரணை: ரஷியா, சீனா தலையீட்டை விரும்பும் பாகிஸ்தான்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான விசாரணையில் ரஷியாவும் சீனாவும் தலையிட பாகிஸ்தான் விரும்புவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ரஷிய அரசு நடத்தும் ஆா்ஐஏ ஊடக நிறுவனத்துக்கு அண்மையில் பாகி... மேலும் பார்க்க