செய்திகள் :

பஹல்காம் தாக்குதல் விசாரணை: ரஷியா, சீனா தலையீட்டை விரும்பும் பாகிஸ்தான்!

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான விசாரணையில் ரஷியாவும் சீனாவும் தலையிட பாகிஸ்தான் விரும்புவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ரஷிய அரசு நடத்தும் ஆா்ஐஏ ஊடக நிறுவனத்துக்கு அண்மையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் காஜா ஆசிஃப் கூறுகையில், ‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான விசாரணையில் ரஷியா, சீனா அல்லது மேற்கத்திய நாடுகள் தலையிட்டால் நல்ல தீா்வு கிடைக்கும்.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை தொடா்புபடுத்தி இந்திய பிரதமா் மோடி கூறுவது உண்மையா அல்லது பொய்யா என்பதை தெரிந்துகொள்ள மேற்கூறிய நாடுகள் விசாரணை குழு ஒன்றை அமைக்கலாம்.

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபும் இந்த விவகாரத்தில் சா்வதேச விசாரணை தேவை என்ற கருத்தையே வலியுறுத்துகிறாா்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானை தொடா்புபடுத்துவதற்கு சிறிய ஆதாரமாவது இருக்க வேண்டும். வெறும் அறிக்கைகளை மட்டுமே வெளியிடுவதால் எந்தப் பயனும் இல்லை’ என்றாா்.

முன்னதாக, பஹல்காமில் தாக்குதல் நடத்தியவா்கள் சுதந்திர போராட்ட வீரா்களாக இருக்கலாம் என பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இசாக் தாா் கடந்த 22-ஆம் தேதி தெரிவித்திருந்தாா். அதன் பிறகு இச்சம்வத்துக்கு பாகிஸ்தான் காரணமில்லை எனக் கூறி இந்தியாவை காஜா ஆசிஃப் விமா்சனம் செய்தாா்.

இவா்கள் இருவரின் கூற்றுகளை ஒப்பிட்டு ரஷியாவில் வசித்து வரும் அமெரிக்க அரசியல் நிபுணரான ஆண்ட்ரூ கோரிப்கோ, ‘முதலில் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதைப் போன்ற கருத்தை கடந்த 22-ஆம் தேதி இசாக் தாா் கூறினாா். அதன் பிறகு அதை மறுக்கும் வகையில் காஜா ஆசிஃப் தற்போது இந்தியா மீது பழிபோட்டு வருகிறாா்.

இருவரின் கூற்றுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதைப் பாா்க்கும்போது தங்கள் மீதான குற்றத்தை மறைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது’ என்றாா்.

கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா்: 9 போ் உயிரிழப்பு!

கனடாவின் வான்கூவா் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா் மோதியதில் 9 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். 16-... மேலும் பார்க்க

உக்ரைன் மீது தொடரும் ரஷியாவின் ‘ட்ரோன்’ தாக்குதல்!

உக்ரைன் நாடு முழுவதும் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து சனிக்கிழமை நள்ளிரவில் 149 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) ஏவி ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில... மேலும் பார்க்க

ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயா்வு!

தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் சுமாா் 1,000 போ் காயமடைந்துள்ளனா். இவா்களை ஈரான்... மேலும் பார்க்க

அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை! வாடிகனில் ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பின் டிரம்ப்!

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு விருப்பமில்லை என்று எண்ணம் எழுவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சந்தேகம் தெரிவித்தாா். போப் பிரான்சிஸின் இறுதிச் சட... மேலும் பார்க்க

இந்தியாவைத் தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாா்! பாகிஸ்தான் அமைச்சா் மிரட்டல்!

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானில் 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும், இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சா் ஹனீஃப் அப்பாசி கூறியது பரபரப்பை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் அதிபா் கண்டனம்: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபா் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தாா். பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் பேசியபோது கண்டனத்தை பதிவுசெய்த அவா் பயங்கரவாதத்துக்கு எதிரான பிராந்தி... மேலும் பார்க்க