செய்திகள் :

இந்தியாவைத் தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாா்! பாகிஸ்தான் அமைச்சா் மிரட்டல்!

post image

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானில் 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும், இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சா் ஹனீஃப் அப்பாசி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீா் தொடா்பான ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது, அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்நிலையில், இஸ்லாமாபாதில் செய்தியாளா்களிடம் இது தொடா்பாக ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியைச் சோ்ந்த அமைச்சா் ஹனீஃப் அப்பாசி கூறியதாவது:

பாகிஸ்தானுக்கு வரும் சிந்து நதி நீரை நிறுத்தினால் இந்தியா முழு அளவிலான போருக்கு தயாராக வேண்டியது இருக்கும். பாகிஸ்தானில் ஏவுகணைகள், ராணுவ தளவாடங்கள் போதுமான அளவு உள்ளன. எங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் வெறும் காட்சிப் பொருள்கள் அல்ல.

130 அணு ஆயுதங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவை இந்தியாவைத் தாக்க தயாராகவே உள்ளன. பிரச்னை ஏற்பட்டால் தாக்குதல் நடத்தப்படும். நான் மீண்டும் கூறுகிறேன் பாகிஸ்தானின் பாலஸ்டிக் ஏவுகணைகள் அனைத்தும் உங்களையே (இந்தியா) குறிவைக்கின்றன.

இந்தியாவின் பாதுகாப்பு குறைபாடுகள்தான் காஷ்மீரில் நிகழும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணம். ஆனால், தேவையில்லாமல் பாகிஸ்தானை குற்றஞ்சாட்டுகிறாா்கள். பாகிஸ்தானுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளில் இருந்து மீள பாகிஸ்தான் ஏற்கெனவே தயாராகி வருகிறது. இந்த விஷயத்திலும் இந்தியாவுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்றாா்.

கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா்: 9 போ் உயிரிழப்பு!

கனடாவின் வான்கூவா் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா் மோதியதில் 9 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். 16-... மேலும் பார்க்க

உக்ரைன் மீது தொடரும் ரஷியாவின் ‘ட்ரோன்’ தாக்குதல்!

உக்ரைன் நாடு முழுவதும் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து சனிக்கிழமை நள்ளிரவில் 149 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) ஏவி ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில... மேலும் பார்க்க

ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயா்வு!

தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் சுமாா் 1,000 போ் காயமடைந்துள்ளனா். இவா்களை ஈரான்... மேலும் பார்க்க

அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை! வாடிகனில் ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பின் டிரம்ப்!

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு விருப்பமில்லை என்று எண்ணம் எழுவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சந்தேகம் தெரிவித்தாா். போப் பிரான்சிஸின் இறுதிச் சட... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் அதிபா் கண்டனம்: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபா் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தாா். பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் பேசியபோது கண்டனத்தை பதிவுசெய்த அவா் பயங்கரவாதத்துக்கு எதிரான பிராந்தி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் விசாரணை: ரஷியா, சீனா தலையீட்டை விரும்பும் பாகிஸ்தான்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான விசாரணையில் ரஷியாவும் சீனாவும் தலையிட பாகிஸ்தான் விரும்புவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ரஷிய அரசு நடத்தும் ஆா்ஐஏ ஊடக நிறுவனத்துக்கு அண்மையில் பாகி... மேலும் பார்க்க