செய்திகள் :

"கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்" - செந்தில் பாலாஜி

post image

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் பணிகளைச் செந்தில் பாலாஜி நேற்று (ஏப்ரல் 27) காலை பார்வையிட்டார்.

அப்போது, கரூர் - திருச்சி மாவட்டங்களை இணைக்கும் காவிரி ஆற்றைக் கடந்து செல்ல, நெரூர்- உன்னியூர் இடையே உயர்மட்ட பாலம் சுமார் ரூ. 92 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி,

"தற்போது நெரூர் - உன்னியூர் இடையே கட்டப்படும் பாலம் ரூ.92 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று, தற்போது 90 சதவிகித பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, மீதமுள்ள 10 சதவிகிதம் வேலையும் வருகின்ற ஜூன் மாதத்திற்குள் முடிவடைந்து தமிழக முதல்வர் தலைமையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படும். இந்த பாலம் எனது கனவுத் திட்டம்.

மேலும், நெரூரில் ஒரு தடுப்பணையும், குளித்தலை தாலுகா, மருதூரில் ஒரு தடுப்பணையும் ரூ.780 கோடி மதிப்பில் கட்டப்பட அறிவிப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

senthil balaji
senthil balaji

அதனைத் தொடர்ந்து, அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அறிவிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதுவும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கரூரில் ரிங் ரோட்டைப் பொறுத்தவரைக் கோவை ரோடு தண்ணீர்ப் பந்தல் பகுதியிலிருந்து தொடங்கி, ஈரோடு ரோடு, குட்டக் கடை வழியாக மாங்காசோலிப்பாளையம், மண்மங்கலம், வாங்கல் சாலை வழியாக சோமூர் 16 கால் மண்டபத்தில் பிரிந்து கோயம்பள்ளி மேலப்பாளையம் பாலம் வழியாகப் பொதுமக்கள் எளிதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல சிறப்பு வாய்ந்த திட்டம் விரைவில் நான்கு கட்டமாகப் பணிகள் தொடங்கப்படும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'என்னை சுடுங்கள்; ஆனால், பாகிஸ்தானுக்கு மட்டும் அனுப்பாதீங்க' - கதறும் பெண்மணி; பின்னணி என்ன?

ஒடிசா பலசோர் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார் பாகிஸ்தானை சேர்ந்த 72-வயது பெண்மணி. இவரது அப்பா பீகாரை சேர்ந்தவர். பல்வேறு காரணங்களால் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானிற்கு அவர் இடம்பெயர்ந்துள்ளார். அவரது ... மேலும் பார்க்க

Pahalgam Attack: 'ஒருதலைபட்சமான, சட்டவிரோத நடவடிக்கை' - பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த சீனா

கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கலாம் என்று இந்தியா வலுவாக சந்தேகிக்க... மேலும் பார்க்க

Pahalgam Attack: ஷோயப் அக்தரின் சேனல் உட்பட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை; காரணம் என்ன?

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் நா... மேலும் பார்க்க

`அகவிலைப்படி உயர்வு; திருமண முன்பணம் ரூ.5 லட்சம்’ - அரசு ஊழியர்களுக்கு வெளியான அறிவிப்புகள்

சட்டப்பேரவையில் இன்று( ஏப்ரல் 28) அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதன்படி, “அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு 2025 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து வழங்க... மேலும் பார்க்க

மாஞ்சோலை : `அடுக்குமாடி வேண்டாம்; சமத்துவபுரம் வேண்டும்’ - தொழிலாளர்கள் வலியுறுத்துவது ஏன்?

மாஞ்சோலையிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், மறுவாழ்வு திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மதுரை மக்கள் கண்கானிப்பக செயல் இயக்குநர் ஹென்றி ... மேலும் பார்க்க

போரை நிறுத்தாத ரஷ்யா; உக்ரைனில் தொடரும் உயிர் பலிகள்! - என்ன நடந்தது?

'இதோ முடிந்துவிடும்', 'அதோ முடிந்துவிடும்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்த ரஷ்ய - உக்ரைன் போர், வெற்றிகரமான பேச்சுவார்த்தையை கூட இதுவரை எட்டவில்லை.ரஷ்யா, உக்ரைன் மீதான தனது தாக்குதலை தொடர்ந்து... மேலும் பார்க்க