செய்திகள் :

``வேளாங்கண்ணி கலைஞர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்..'' -சுற்றுலா பயணிகள் கோரிக்கை

post image

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்று கொண்டாடப்படுகிறது. தென்னிந்திய அளவில் அதிக மக்கள் இங்கு அமைந்துள்ள கிறிஸ்தவ புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், வழிபட்டுச் செல்கின்றனர்.

மேலும் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாள்களில் இங்கு வரும் பொதுமக்கள் பேராலயத்தையொட்டி அமைந்துள்ள கடற்கரையை பார்த்து கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்த கடற்கரைக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள கலைஞர் பூங்கா இடிபாடுகளுடன் பொதுமக்களும் குழந்தைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வேளாங்கண்ணி கலைஞர் பூங்கா

இதுகுறித்து அங்குள்ள ஜோசப் என்ற சுற்றுலா பயணியிடம் விசாரித்தோம், "வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக திண்டிவனத்திலிருந்து நாங்கள் கூட்டமாக வருவோம். வந்து அன்னை மாதாவை பிரார்த்தித்து விட்டு எங்கள் பாவங்களை துடைத்த பிறகு, இந்த கடற்கரையில் கொண்டாடி மகிழ்வோம்.

கடந்த மூன்று வருடங்களாக இங்குள்ள கலைஞர் பூங்கா சரி செய்யப்படாமலே உள்ளது. இந்த கலைஞர் பூங்காவில் குழந்தைகள் விளையாடக்கூடிய விளையாட்டு உபகரணங்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதுடன், கடற்கரை பகுதி சுகாதார சீர்கேட்டுடன் இருந்து வருகிறது.

எதிர் வருவது கோடைகாலம் என்பதால் நிறைய சுற்றுலாப் பயணிகள் இந்த வேளாங்கண்ணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது. அப்படி வரும் பட்சத்தில் இந்த கலைஞர் பூங்காவை மேலும் மெருகூட்டினாள் அவர்களுக்கு சௌகரியமாக இருக்கும்" என்று கூறினார்.

வேளாங்கண்ணி கலைஞர் பூங்கா

தொடர்ந்து சிறப்பு நிலை பேரூராட்சியின் தலைவர் டயானா செர்லினிடம் இது குறித்து விளக்கம் கேட்டோம் "இந்த கலைஞர் பூங்கா தொடர்பாக பணிகள் தொடர முனைப்பு காட்டி வருகிறோம் கூடிய விரைவில் பூங்கா புனரமைக்கப்படும்" என்று கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகாலமாக எந்த ஒரு முன்னேற்றமும் காணாமல் இருக்கும் இந்த கலைஞர் பூங்காவை புனரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`குளிரூட்டப்பட்ட அறையில் குங்குமப்பூ விவசாயம்' - சாதித்த கேரள இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி!

குங்குமப்பூ நம் நாட்டில் காஷ்மீர் மட்டுமே நல்லபடியாக விளைச்சலை கொடுத்து வருகிறது. காஷ்மீரில் நிலவும் சீதோஷ்ண நிலைதான் குங்குமப்பூ விளைச்சலுக்கு கைகொடுக்கிறது. நாட்டின் பிற பகுதிகளில் குங்குமப்பூ விவசா... மேலும் பார்க்க

``தேசத்தின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்பவர்கள்..'' - ஜம்மு - கஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம்

ஜம்மு கஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டஹ்தில் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரின் பெயர்களைப் படித... மேலும் பார்க்க

அமைச்சரவை மாற்றம்: மீண்டும் அமைச்சராக பதவியேற்கும் மனோ தங்கராஜ்..

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு பரபரப்பாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் சர்ச்சையான பேச்சுகளாலும், அமை... மேலும் பார்க்க

Stalin: ``பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி..'' - அதிமுகவை கடுமையாகச் சாடிய ஸ்டாலின்

சட்டபேரவையில் இன்று ( ஏப்ரல்27) ஸ்டாலின் அதிமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். "எதிர்கட்சித் தலைவர் ஆதாரம் இல்லாத வகையில் பொத்தாம் பொதுவாக குற்றசாட்டுகளைச் சொல்லும் காரணத்தால் சில வி... மேலும் பார்க்க

Doctor Vikatan: பொது இடங்களில் பெரிதாக வெளிப்படும் ஏப்பம்; குணப்படுத்த நிரந்தர தீர்வு உண்டா?

Doctor Vikatan: நான்ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறேன். எனக்கு அடிக்கடி ஏப்பம் விடும் வழக்கம் இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் அது பெரிய சத்தத்துடன் ஏப்பமாகவெளியேறும். இதனால் மா... மேலும் பார்க்க

`மகனுக்கு, BJP தந்த பிரஷர்! கூட்டணிக்கு EPS ஓகே' - Ramasubramanian Interview | Amitshah, Modi | DMK

'டாக்டர் ராமசுப்பிரமணியன்' மிக முக்கியமான அரசியல் விமர்சகர். அ.தி.மு.க ஏன் பா.ஜ.க-வுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டது, எந்த இடத்தில் எடப்பாடி சிக்கிக்கொண்டார், எதை வைத்து அமித்ஷா கூட்டணி எனும் வலைக்கு கொ... மேலும் பார்க்க