செய்திகள் :

Stalin: ``பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி..'' - அதிமுகவை கடுமையாகச் சாடிய ஸ்டாலின்

post image

சட்டபேரவையில் இன்று ( ஏப்ரல்27) ஸ்டாலின் அதிமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். "எதிர்கட்சித் தலைவர் ஆதாரம் இல்லாத வகையில் பொத்தாம் பொதுவாக குற்றசாட்டுகளைச் சொல்லும் காரணத்தால் சில விளக்கங்களை நான் சொல்ல வேண்டியிருக்கிறது.

மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் (எடப்பாடி)அவரது ஆட்சியின் சில சாதனைகளைத் தலைப்பு செய்தியாகச் சொன்னார். அதேபோல இப்போது நடந்துகொண்டிருக்கக்கூடிய ஆட்சியில் சில விஷயங்களைத் தலைப்பு செய்தியாகச் சொன்னார். ஆனால் தமிழ்நாட்டு மக்களைக் கேட்டால் அவரது ஆட்சியில் நடந்த விஷயங்களைக் கண்ணீருடன் புலம்புவார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி, அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி, சாமானிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு சாத்தான்குளமே சாட்சி, துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிசூடே சாட்சி, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள தமிழகத்தின் உரிமைகளை அடகுவைத்த ஆட்சி.

தமிழ்நாட்டு மக்களின் புலம்ப வைத்ததே அதிமுக ஆட்சியின் சாதனை. எங்கும் எதிலும் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என எதிலும் ஊழல். அந்த ஊழலில் இருந்துத் தப்பித்துக்கொள்ளத் தமிழ்நாட்டு உரிமைகளை எல்லாம் அடகு வைத்தது யார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.

எதிர்கட்சித் தலைவர் தலைமையில் ஆட்சி நடந்ததை விட திமுக ஆட்சியின் இந்த நான்கு ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்திருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் ஒப்பிடும்போது 2024 ஆண்டில்தான் கொலை சம்பவங்கள் குறைந்திருக்கிறது.

இபிஸ்
இபிஸ்

அதிமுக ஆட்சியில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ரவுடிகள் 1929 பேர் என்றால் திமுக ஆட்சியில் 3645 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். காவல்நிலைய மரணங்கள் அடியோடு குறைக்கப்பட்டிருக்கிறது.

எனவே நான் இங்கே குறிப்பிடுவது திமுகவின் சட்ட ஒழுங்கைப் பற்றி பேச அதிமுகவிற்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`குளிரூட்டப்பட்ட அறையில் குங்குமப்பூ விவசாயம்' - சாதித்த கேரள இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி!

குங்குமப்பூ நம் நாட்டில் காஷ்மீர் மட்டுமே நல்லபடியாக விளைச்சலை கொடுத்து வருகிறது. காஷ்மீரில் நிலவும் சீதோஷ்ண நிலைதான் குங்குமப்பூ விளைச்சலுக்கு கைகொடுக்கிறது. நாட்டின் பிற பகுதிகளில் குங்குமப்பூ விவசா... மேலும் பார்க்க

``தேசத்தின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்பவர்கள்..'' - ஜம்மு - கஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம்

ஜம்மு கஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டஹ்தில் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரின் பெயர்களைப் படித... மேலும் பார்க்க

``வேளாங்கண்ணி கலைஞர் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்..'' -சுற்றுலா பயணிகள் கோரிக்கை

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்று கொண்டாடப்படுகிறது. தென்னிந்திய அளவில் அதிக மக்கள் இங்கு அமைந்துள்ள கிறிஸ்தவ புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், வழிபட்டுச் செல்... மேலும் பார்க்க

அமைச்சரவை மாற்றம்: மீண்டும் அமைச்சராக பதவியேற்கும் மனோ தங்கராஜ்..

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு பரபரப்பாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் சர்ச்சையான பேச்சுகளாலும், அமை... மேலும் பார்க்க

Doctor Vikatan: பொது இடங்களில் பெரிதாக வெளிப்படும் ஏப்பம்; குணப்படுத்த நிரந்தர தீர்வு உண்டா?

Doctor Vikatan: நான்ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறேன். எனக்கு அடிக்கடி ஏப்பம் விடும் வழக்கம் இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் அது பெரிய சத்தத்துடன் ஏப்பமாகவெளியேறும். இதனால் மா... மேலும் பார்க்க

`மகனுக்கு, BJP தந்த பிரஷர்! கூட்டணிக்கு EPS ஓகே' - Ramasubramanian Interview | Amitshah, Modi | DMK

'டாக்டர் ராமசுப்பிரமணியன்' மிக முக்கியமான அரசியல் விமர்சகர். அ.தி.மு.க ஏன் பா.ஜ.க-வுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டது, எந்த இடத்தில் எடப்பாடி சிக்கிக்கொண்டார், எதை வைத்து அமித்ஷா கூட்டணி எனும் வலைக்கு கொ... மேலும் பார்க்க