செய்திகள் :

Pahalgam Attack: 'ஒருதலைபட்சமான, சட்டவிரோத நடவடிக்கை' - பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த சீனா

post image

கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கலாம் என்று இந்தியா வலுவாக சந்தேகிக்கிறது. இதனால், இந்தியா அட்டாரி - வாகா எல்லை மூடுதல், சிந்து நீர் ஒப்பந்தம் ரத்து போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்து வருகிறது.

அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அண்டை நாடான சீனா இந்தத் தாக்குதல் குறித்து வாயை திறக்கவே இல்லை.

சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தார் தொலைபேசி பேச்சு
சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தார் தொலைபேசி பேச்சு

இந்த நிலையில், நேற்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தாரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதுக்குறித்து பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், "வாங் யி இந்தியாவின் ஒருதலைபட்சமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளையும், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா செய்யும் ஆதாரமற்ற பிரசாரத்தையும் எதிர்த்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து இந்தியா உடன் நிற்கிறது அமெரிக்கா. சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது.

இந்தத் தாக்குதலுக்கு தக்க பதில் கொடுத்தே ஆவோம் என்கிற இந்தியாவின் உறுதிப்பாட்டை, சீனாவின் இந்த நிலைபாடு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

'என்னை சுடுங்கள்; ஆனால், பாகிஸ்தானுக்கு மட்டும் அனுப்பாதீங்க' - கதறும் பெண்மணி; பின்னணி என்ன?

ஒடிசா பலசோர் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார் பாகிஸ்தானை சேர்ந்த 72-வயது பெண்மணி. இவரது அப்பா பீகாரை சேர்ந்தவர். பல்வேறு காரணங்களால் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானிற்கு அவர் இடம்பெயர்ந்துள்ளார். அவரது ... மேலும் பார்க்க

Pahalgam Attack: ஷோயப் அக்தரின் சேனல் உட்பட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை; காரணம் என்ன?

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் நா... மேலும் பார்க்க

`அகவிலைப்படி உயர்வு; திருமண முன்பணம் ரூ.5 லட்சம்’ - அரசு ஊழியர்களுக்கு வெளியான அறிவிப்புகள்

சட்டப்பேரவையில் இன்று( ஏப்ரல் 28) அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதன்படி, “அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு 2025 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து வழங்க... மேலும் பார்க்க

மாஞ்சோலை : `அடுக்குமாடி வேண்டாம்; சமத்துவபுரம் வேண்டும்’ - தொழிலாளர்கள் வலியுறுத்துவது ஏன்?

மாஞ்சோலையிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், மறுவாழ்வு திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மதுரை மக்கள் கண்கானிப்பக செயல் இயக்குநர் ஹென்றி ... மேலும் பார்க்க

போரை நிறுத்தாத ரஷ்யா; உக்ரைனில் தொடரும் உயிர் பலிகள்! - என்ன நடந்தது?

'இதோ முடிந்துவிடும்', 'அதோ முடிந்துவிடும்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்த ரஷ்ய - உக்ரைன் போர், வெற்றிகரமான பேச்சுவார்த்தையை கூட இதுவரை எட்டவில்லை.ரஷ்யா, உக்ரைன் மீதான தனது தாக்குதலை தொடர்ந்து... மேலும் பார்க்க

தஞ்சை அரசு மருத்துவமனை தீ விபத்து: ”உயிரைப் பணயம் வச்சு காப்பாத்தினோம்; ஆனா..”- கொதிக்கும் ஊழியர்கள்

தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி மகப்பேறு சிகிச்சைப் பிரிவு வார்டில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வார்டு முழுவதும் புகை சூழ்ந்தது... மேலும் பார்க்க