செய்திகள் :

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் வங்க தேசத்தினர் 30க்கும் மேற்பட்டோர் கைது

post image

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்சைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் வங்க தேச நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தில்லி போலீஸாருக்கு வந்த தகவலையடுத்து தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்க தேச நாட்டைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி இந்த பகுதிகளில் தங்கி சாலையோரங்களில் பழைய பொருட்களை சேகரித்து வந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் சட்ட விரோதமாக தமிழகத்திற்குள் வந்தது எப்படி? இவ்வளவு நாள்கள் எப்படி தங்கியிருந்தார்கள்? இவர்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்த நபர்கள் யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தில்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் இருப்பதால் அவர்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அசாமில் காங்கிரஸ் எம்.பி. வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

இவர்கள் இங்கு தங்கி இருந்த நாள்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏதேனும் உதவி புரிந்தார்களா அல்லது சதி செயலுக்காக சென்னை வந்தார்களா என பல்வேறு கோணங்களில் தில்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சட்டவிரோதமாக தங்கி உள்ள வங்க தேச நாட்டைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மே 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மே 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட செய்தியில், குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறத... மேலும் பார்க்க

மகப்பேறு விடுப்பு: முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: அரசுப் பணியில் உள்ள மகளிருக்கான மகப்பேறு விடுப்பு குறித்த மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை விதி 110-ன்க... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து!

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.மேலும், அடுத்த 6 மாதங்களின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று தமி... மேலும் பார்க்க

தமிழகத்தில் மதவாதம் எங்கு இருக்கிறது? மு.க. ஸ்டாலின் - வானதி சீனிவாசன் காரசார வாதம்!

தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு சக்தி எங்கு இருக்கிறது? எப்படி, எந்த சூழலில் இருக்கிறது என்று சொல்லுங்கள்? என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று, கோவையில் காரில... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் கைது

விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பொது விநியோகத் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் இரண்டு தீவிரவாதிகள் கைது

மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பான காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி (நோயோன்)இன் இரண்டு தீவிர உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.ஷகோல்ஷெம் லெம்பா மைதேயி மற்றும் ஷாகோல்ஷெம் ரோமன... மேலும் பார்க்க