செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: சமூக ஊடகங்களில் வைரலான செய்யறிவு(ஏஐ) புகைப்படங்கள்!

post image

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலான சில புகைப்படங்கள் செய்யறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப். 22 (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல சம்பவம் நடைபெற்ற இடத்தில், புல்வெளியில் பனிமூட்டத்தின் நடுவே இறந்தவர்கள் கிடப்பது போன்ற ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின.

செய்யறிவு புகைப்படம்

இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் மற்றும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பலரும், இந்த புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்டனர்.

இந்நிலையில் அந்த புகைப்படங்கள் 'செய்யறிவு புகைப்படங்கள்' (AI generated Images) என்று 'அல்ட் நியூஸ்', 'நியூஸ் மீட்டர்' உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சரிபார்ப்பில் அவை செய்யறிவு புகைப்படங்கள் என உறுதியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

செய்யறிவு புகைப்படம்

பஹல்காம் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் 26 போ் உயிரிழந்தனா்.

அதைத்தொடர்ந்து மறுநாள் பிரதமா் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், சிந்து நதி நீா் பகிா்வு ஒப்பந்தம் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்களுக்கு விசா (நுழைவு இசைவு) ரத்து, பரஸ்பர தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதேபோல சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்களுக்குத் தடை என பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை அறிவித்ததால் இருத்தரப்புக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்திய ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவமும் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும், பயங்கரவாதிகள் கடுமையான தண்டனையைப் பெறுவார்கள் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை: 13 பேரின் ஆயுள் தண்டனை உறுதி! - உச்ச நீதிமன்றம்

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு மோசமானவன் அல்ல! ஒமர் அப்துல்லா

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு முடித்து வைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்துவைத்தது.இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணை ... மேலும் பார்க்க

ஆபாச படங்கள்: ஓடிடி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

ஆபாச படங்கள், இணையத் தொடர்களை ஓடிடியில் வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஓடிடி நிறுவனங்கள், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஓடிடி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும... மேலும் பார்க்க

அசாமில் காங்கிரஸ் எம்.பி. வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

அசாமில் காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தில் இருந்து... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளை தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்ட பிபிசி: வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு!

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என்று குறிப்பிட்ட பிபிசி நிறுவனத்தின் செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனமும்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை நான்காக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் எழுந்திருக்கும் நிலையில், பாகிஸ்தானை நான்காக உடைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள... மேலும் பார்க்க