செய்திகள் :

ரிஷப் பந்துக்கு ரூ. 24 லட்சம் அபராதம்!

post image

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் மும்பை அணி பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் மும்பை அணி 215 ரன்கள் எடுத்த நிலையில், சேஸிங் செய்த லக்னெள 20 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில், முதலில் பந்துவீசிய லக்னெள அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.22ன் படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது இரண்டாவது முறை என்பதால் ரிஷப் பந்துக்கு ரூ. 24 லட்சமும், இம்பேக்ட் வீரர் உள்பட அணியின் மற்ற வீரர்களுக்கு ரூ. 6 லட்சம் அல்லது போட்டி சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ஏப்ரல் 4 ஆம் தேதி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக லக்னெள அணியின் கேப்டன் பந்துக்கு ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

மேலும், இந்த சீசனில் மூன்றாவது முறையாக லக்னெள அணி மெதுவாக பந்துவீசும் பட்சத்தில் ரிஷப் பந்துக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படும்.

ஏற்கெனவே இந்த சீசனில் ராஜஸ்தான் அணி இரண்டு முறை மெதுவாக பந்துவீசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் வரலாற்றுச் சாதனை!

லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.மும்பை வான்கடே மைதானத்தில் லக்னெள அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன... மேலும் பார்க்க

விராட் கோலி, க்ருணால் பாண்டியா அசத்தல்: ஆர்சிபிக்கு 7-வது வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்டின் 46-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது. முதலில் டெல்லி 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு... மேலும் பார்க்க

ஆர்சிபிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்ல... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டிகளில் 4,000 ரன்களைக் கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை!

ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 4000 ரன்களைக் கடந்துள்ளார்.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜ... மேலும் பார்க்க

ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் அசத்தல் பந்துவீச்சு; மும்பை அபார வெற்றி!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்று... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; பிளேயிங் லெவனில் டு பிளெஸ்ஸி!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங... மேலும் பார்க்க