செய்திகள் :

மின்னல் தாக்குதலை கட்டுபடுத்த புதிய தொழில்நுட்பம் - இது எப்படி செயல்படும் தெரியுமா?

post image

மின்னல் தாக்குதல்களை கட்டுப்படுத்த உலகிலேயே முதல்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மின்னல் தாக்குதல் என்பது இயற்கையாகவே நடைபெறும் ஒரு விஷயமாகும். இந்த மின்னல் தாக்குதலால் உயிர் சேதங்களும், சொத்து இழப்புகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற விபத்துகள் ஜப்பானில் அடிக்கடி நிகழ்கின்றன. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு தொழில்நுட்பத்தை ஜப்பான் உருவாக்கியுள்ளது.

மின்னலை தவிர்ப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று! எங்கு நடக்கும்? எப்போது நடக்கும் என்பதை கணிப்பதும் சாத்தியமற்றது. இருப்பினும் ஜப்பானிய விஞ்ஞானிகள் மின்னலை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட ஒரு சிறப்பு ட்ரோன் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

ஜப்பானில் மின்னல் தொடர்பான விபத்துகளை குறைப்பதற்கும் பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்த தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மின்னல் தாக்குதல்களை நிர்வாகிப்பதாக கூறப்படும் இந்த தொழில்நுட்பம், மின்னலை பாதுகாப்பான இடத்தில் தாக்கும் வகையில் வழிநடத்தும் என கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை ஜப்பானின் நிர்பான் டெலிகிராஃப் மற்றும் தொலைபேசி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மின்னலால் ஜப்பானில் அதிகமான இழப்பு ஏற்படுத்துவதால் இதனை சமாளிக்க இந்த தொழில்நுட்பம் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

எப்படி செயல்படும்?

முதலில் ட்ரோன் ஒரு குறிப்பிட்ட மின்புலத்தை அடையாளம் கண்டபிறகு, ஆராய்ச்சியாளர்கள் அந்த ட்ரோனுடன் இணைக்கப்பட்ட ஒரு சுவிட்சை தரையில் இருந்து செயல்படுத்தினர். சோதனையின் போது ட்ரோனால் மின்னலின் திசையை மாற்ற முடிந்தது. இதனால் அது பாதுகாப்பான இடத்தை தாக்கியது.

இந்த புதிய கண்டுபிடிப்புகள் மூலம் விஞ்ஞானிகள் மின்னல் உருவாக்கும் செயல்முறை பற்றிய ஆழமான புரிதல்களை பெறலாம். மேலும் அதை கட்டுப்படுத்த சிறந்த வழிமுறைகளையும் உருவாக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

விமானம் பறக்கும் போது மொபைலை Airplane mode-ல் வைக்க சொல்வது ஏன்? காரணம் இதுதான்!

இன்றைக்கு மற்ற போக்குவரத்தை போல விமான போக்குவரத்தையும் மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு விமான நிறுவனங்களும் பல பாதுகாப்பு விதிகளை உள்ளடக்கியுள்ளன. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்... மேலும் பார்க்க

Alien: K2-18b கிரகத்தில் உயிர்கள் நிறைந்த கடல்; அறிவியலாளர்கள் முன்வைக்கும் முக்கிய ஆதாரங்கள் என்ன?

ஏலியன்கள் இனியும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் வரும் பூதங்கள் அல்ல. பூமியிலிருந்து தொலை தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என்பதற்கான வலுவான ஆதாரங்களை அறிவியல... மேலும் பார்க்க

"12,500 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்குத் திரும்பிய Dire Wolf" - அழிந்த உயிரினத்தை மீட்டது எப்படி?

12,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ஓநாய் இனம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். முதன்முறையாக வெற்றிகரமாக மறு உருவாக்கம் அடைந்த உயிரினம் இதுதான் என்கின்றனர். அமெரிக்கா... மேலும் பார்க்க

தும்மலின் போது கண்களை திறந்து வைக்க முடியாதா?! ஏன் தெரியுமா?

தும்மல் என்பது நுரையீரலில் இருந்து மூக்கு வழியாக காற்றை வெளியேற்றும் ஒரு செயல்முறையாகும்.பொதுவாக கண்களை மூடி கொண்டு தான் தும்மல் ஏற்படும். ஏன் கண்களைத் திறக்கக் கொண்டு தும்மல் முடியவில்லை எப்போதாவது ய... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி - இதற்கு பின்னால் இவ்வளவு காரணம் இருக்கா?

வீடுகளில் பெரும்பாலும் அரளிச் செடியை அதன் விஷத்தன்மை காரணமாக வளர்ப்பது இல்லை. ஆனால் நெடுஞ்சாலைகளில் செவ்வரளிச் செடி அதிகம் இருப்பதை பார்த்திருப்போம். பார்ப்பதற்கு அழகாக இருப்பதாலும் அதனை பராமரிப்பது க... மேலும் பார்க்க

`இது புகையல்ல...' - விமானங்களுக்குப் பின்னால் வெள்ளை நிற கோடுகள் எப்படி உருவாகின்றன தெரியுமா?

வானத்தில் விமானங்கள் பறந்து செல்லும்போது அதற்கு பின்னால் வெள்ளை கோடுகள் தோன்றும், அதனை பலரும் விமானத்திலிருந்து வரும் புகை என்று நினைத்திருப்போம். ஆனால் அது உண்மையில் புகையல்ல...பொதுவாக ஜெட் விமானங்கள... மேலும் பார்க்க