செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: சீனா யார் பக்கம்?

post image

பஹல்காம் தாக்குதல் குறித்து விரைவான விசாரணை மேற்கொள்ள சீனா வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் அமைதி திரும்ப தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதை சீனா வரவேற்கிறது என்று சீன வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.

இந்த நிலையில், பஹல்காம் விவகாரம் குறித்து சீனா தரப்பில் இன்று(ஏப். 28) வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியிருப்பதாவது: இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் அண்டை நாடாக திகழும் சீனா, மேற்கண்ட இரு நாடுகளும் இணைந்து ஒரே திசையில் வேறுபாடுகளைக் களைந்து பேச்சுவார்த்தை வழியாக தீர்வு காண முயல வேண்டுமென்பதையே விரும்புகிறது. இதன்மூலம், அப்பகுதியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவல் 12 நாள்களுக்கு நீட்டிப்பு!

தஹாவூர் ராணாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் இன்று (ஏப். 28) உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு விதிக்கப்பட்ட 18 நாள்கள் காவல் இன்றுடன் முடி... மேலும் பார்க்க

புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள்: பிரான்ஸுடன் ஒப்பந்தம் கையெழுத்து - அடுத்து என்ன?

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் பிரான்ஸிடமிருந்து ரூ. 64,000 கோடியில் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று(ஏப். 28) கையெழுத்திட்டது. இரு நா... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக காஷ்மீரில் 14 பேரின் பட்டியலை தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்ல என்றும், பாகிஸ்தானைச... மேலும் பார்க்க

ஒம்காரேஸ்வரர் கோயிலிலிருந்து கேதார்நாத்துக்குப் புறப்பட்ட சிவன் சிலை!

கேதார்நாத் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு உகிமாத் நகரில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலிலிருந்து சிவன் சிலை இன்று கேதார்நாத்துக்குப் புறப்பட்டது. சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு மோசமானவன் அல்ல! ஒமர் அப்துல்லா

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு முடித்து வைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்துவைத்தது.இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணை ... மேலும் பார்க்க