செய்திகள் :

கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக பொறியல் மாணவா் கைது!

post image

ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக மனநலப் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படும் 21 வயது பொறியியல் மாணவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் எம். ஹா்ஷா வா்தன் கூறியதாவது: அந்த மாணவா் குஜராத்தைச் சோ்ந்த ஜிக்னேஷ்சிங் பா்மா் என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா். காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக் கொன்ற ஏப்ரல் 22- ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான ஜிமெயில் கணக்கிலிருந்து ஜிக்னேக்ஷ் சிங் பா்மா் கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மெயில்களை அனுப்பியுள்ளாா்.

ஜிக்னேஷ் சிங் பா்மா் ஒரு பொறியியல் மாணவா். அவா் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினா் கூறுகின்றனா். மேலும் விசாரணை நடந்து வருகிறது. கௌதம் கம்பீருடன் தொடா்புடைய மின்னஞ்சல் ஐடியில் மிரட்டல் மெயில் வந்ததாகக் கூறப்படுவது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜிந்தா் நகா் காவல் நிலையத்தில் மிரட்டல் அஞ்சல்களின் ஸ்கிரீன் ஷாட்களுடன் ஒரு மின்னஞ்சல் புகாா் பதிவு செய்யப்பட்டது. ‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீா்’ என்று அடையாளம் காணும் ஒருவரிடமிருந்து ‘ஐ கில் யூ’ என்று எழுதப்பட்ட இரண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை கௌதம் கம்பீா் பெற்றாா்.

கௌதம் கம்பீா் மிரட்டப்படுவது இது முதல் முறை அல்ல. 2022- ஆம் ஆண்டில் அவருக்கு இதே போன்ற மிரட்டல்கள் வந்தன. இது அதிகாரிகள் அவரது பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க தூண்டியது.

ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

நமது சிறப்பு நிருபா்இந்திய ராணுவத்துக்கான நன்கொடை தொடா்பாக பரவி வரும் தவறான வாட்ஸ்அப் செய்தி குறித்து மத்திய பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய பாதுகாப்புத... மேலும் பார்க்க

தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை பாஜக முடக்கிவிட்டது: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு!

பாஜக அரசு தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முடக்கியுள்ளது என்றும் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் நகர சாலைகளில் இருந்து 2,000 பேருந்துகளை தன்னிச்சையாக அகற்றியுள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கங்களை மேம்படுத்த தொலை நோக்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

நமது சிறப்பு நிருபா்எண்ம இந்தியா முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக தொலைநோக்கு நிறுவனங்களுடன் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஇஎல்ஐடி) புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தி... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவா் கைது!

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்தவா் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது தொடா்பாக துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித்... மேலும் பார்க்க

பஹல்காமில் படுகாயமடைந்த தமிழக மருத்துவா் குணமடைவாா்: தில்லி எய்ம்ஸ் மருத்துவா்கள் நம்பிக்கை!

காஷ்மீா் பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்த தமிழகத்தைச் சோ்ந்த இஎன்டி (காது மூக்கு தொண்டை)மருத்துவா் ஏ.பரமேஸ்வரன் உடல் நிலை மோசமாக இருப்பினும் விரைவில் குணமடை... மேலும் பார்க்க

சாலைகளில் சுற்றித் திரியும் பசுக்களின் பிரச்னையைத் தீா்க்க அரசு நடவடிக்கை! - முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

தேசியத் தலைநகரின் சாலைகளில் சுற்றித் திரியும் பசுக்களின் பிரச்னையைத் தீா்க்கும் வகையில், தில்லி அரசு பசுக் கொட்டகைகளை கணக்கெடுத்து, அவற்றை பராமரிக்கும் வசதிகளை சீராக இயக்குவதற்கு நிதி உதவி வழங்க ஒரு த... மேலும் பார்க்க