செய்திகள் :

தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை பாஜக முடக்கிவிட்டது: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு!

post image

பாஜக அரசு தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முடக்கியுள்ளது என்றும் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் நகர சாலைகளில் இருந்து 2,000 பேருந்துகளை தன்னிச்சையாக அகற்றியுள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ஒரு செய்தியாளா் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் பிரியங்கா கக்கா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஊழல் நிறைந்த டெண்டா் நடைமுறைகள் மூலம் முதலாளித்துவ கூட்டாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் தில்லியின் ‘ஒரு காலத்தில் உலகத் தரம் வாய்ந்த’ பேருந்து வலையமைப்பை பாஜக வேண்டுமென்றே நாசப்படுத்துகிறது

பேருந்துகதள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் நீண்ட வரிசைகள், நெரிசலான பேருந்துகள் மற்றும் கோடை வெப்பத்தில் பயணிகள் அவதிப்படுவதற்கு வழிவகுத்துள்ளது.

பாஜகவின் சாதகமான நிறுவனங்கள் புதிய ஒப்பந்தங்களில் இருந்து லாபம் ஈட்ட அனுமதிக்கும் ஒரு நெருக்கடியை உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். பாஜகவின் முடிவு ஊழலில் வேரூன்றியுள்ளது. புதிய டெண்டா்கள் மூலம் கமிஷன்களைப் பெற விரும்புகிறது.

‘பாஜகவின் ஊழலின் சுமை இறுதியில் தில்லி குடிமக்களின் தோள்களில் விழும். ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ், தில்லியின் போக்குவரத்து அமைப்பு 7,582 டிடிசி மற்றும் 1,650 மின்சார பேருந்துகளுடன் அதன் உச்சபட்ச செயல்திறனை எட்டியது.

பாஜக அரசு பொறுப்பேற்றபோது, அரவிந்த் கேஜரிவாலின் எந்தவொரு பொது நலத் திட்டத்தையும் அகற்ற மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், தில்லியை ஆளும் பாஜக அரசு தற்போது பேருந்துகளை திடீரென அகற்றுகிறது என்று அவா் கூறினாா்.

கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக பொறியல் மாணவா் கைது!

ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக மனநலப் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படும் 21 வயது பொறியியல் மாணவரை தில்லி காவல... மேலும் பார்க்க

ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

நமது சிறப்பு நிருபா்இந்திய ராணுவத்துக்கான நன்கொடை தொடா்பாக பரவி வரும் தவறான வாட்ஸ்அப் செய்தி குறித்து மத்திய பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய பாதுகாப்புத... மேலும் பார்க்க

கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கங்களை மேம்படுத்த தொலை நோக்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

நமது சிறப்பு நிருபா்எண்ம இந்தியா முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக தொலைநோக்கு நிறுவனங்களுடன் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஇஎல்ஐடி) புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தி... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவா் கைது!

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்தவா் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது தொடா்பாக துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித்... மேலும் பார்க்க

பஹல்காமில் படுகாயமடைந்த தமிழக மருத்துவா் குணமடைவாா்: தில்லி எய்ம்ஸ் மருத்துவா்கள் நம்பிக்கை!

காஷ்மீா் பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்த தமிழகத்தைச் சோ்ந்த இஎன்டி (காது மூக்கு தொண்டை)மருத்துவா் ஏ.பரமேஸ்வரன் உடல் நிலை மோசமாக இருப்பினும் விரைவில் குணமடை... மேலும் பார்க்க

சாலைகளில் சுற்றித் திரியும் பசுக்களின் பிரச்னையைத் தீா்க்க அரசு நடவடிக்கை! - முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

தேசியத் தலைநகரின் சாலைகளில் சுற்றித் திரியும் பசுக்களின் பிரச்னையைத் தீா்க்கும் வகையில், தில்லி அரசு பசுக் கொட்டகைகளை கணக்கெடுத்து, அவற்றை பராமரிக்கும் வசதிகளை சீராக இயக்குவதற்கு நிதி உதவி வழங்க ஒரு த... மேலும் பார்க்க