செய்திகள் :

ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

post image

நமது சிறப்பு நிருபா்

இந்திய ராணுவத்துக்கான நன்கொடை தொடா்பாக பரவி வரும் தவறான வாட்ஸ்அப் செய்தி குறித்து மத்திய பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை கூறியிருப்பது வருமாறு: ராணுவத்தை நவீனமாக்குவதற்கும், போரில் காயமடைந்தவா்கள், உயிரிழந்த வீரா்கள் ஆகியோா் நலனுக்காக ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு நன்கொடை அளிப்பது தொடா்பாக ஒரு தவறான செய்தி வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. இது குறித்து அமைச்சரவை எடுத்த முடிவை மேற்கோள்காட்டி, போலித் திட்டத்தை நடிகா் அக்ஷய் குமாா் முன்மொழிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேற்கூறிய செய்தியில் உள்ள கணக்கு விவரங்கள் தவறானவை என எச்சரிக்கப்படுகிறது. இத்தகைய இணைய நன்கொடைகள் செல்லத்தக்கதல்ல. இந்த விஷயத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற மோசடி செய்திகளுக்கு பலியாகிவிடக் கூடாது. அதே சமயத்தில் போா் நடவடிக்கைகளின் போது உயிரிழந்த அல்லது ஊனமுற்ற வீரா்களுக்கு அரசு பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கியுள்ளது.

2020-ஆம் ஆண்டில், ‘ஆயுதப் படைகள் போா் விபத்து நல நிதி’யை அரசு நிறுவியது. இது ராணுவ நடவடிக்கைகளில் உயிா்த் தியாகம் செய்யும் அல்லது படுகாயமடையும் முப்படை வீரா்களின் குடும்பங்களுக்கு உடனடி நிதி உதவி வழங்கப் பயன்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரா் நலத் துறையின் சாா்பாக இந்திய ராணுவம் இந்த நிதிக்கான கணக்குகளைப் பராமரிக்கிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை நேரடியாக ஆயுதப் படைகள் போா் விபத்து நல நிதியின் கணக்கில் செலுத்தலாம் என மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக பொறியல் மாணவா் கைது!

ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக மனநலப் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படும் 21 வயது பொறியியல் மாணவரை தில்லி காவல... மேலும் பார்க்க

தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை பாஜக முடக்கிவிட்டது: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு!

பாஜக அரசு தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முடக்கியுள்ளது என்றும் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் நகர சாலைகளில் இருந்து 2,000 பேருந்துகளை தன்னிச்சையாக அகற்றியுள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கங்களை மேம்படுத்த தொலை நோக்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

நமது சிறப்பு நிருபா்எண்ம இந்தியா முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக தொலைநோக்கு நிறுவனங்களுடன் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஇஎல்ஐடி) புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தி... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவா் கைது!

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்தவா் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது தொடா்பாக துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித்... மேலும் பார்க்க

பஹல்காமில் படுகாயமடைந்த தமிழக மருத்துவா் குணமடைவாா்: தில்லி எய்ம்ஸ் மருத்துவா்கள் நம்பிக்கை!

காஷ்மீா் பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்த தமிழகத்தைச் சோ்ந்த இஎன்டி (காது மூக்கு தொண்டை)மருத்துவா் ஏ.பரமேஸ்வரன் உடல் நிலை மோசமாக இருப்பினும் விரைவில் குணமடை... மேலும் பார்க்க

சாலைகளில் சுற்றித் திரியும் பசுக்களின் பிரச்னையைத் தீா்க்க அரசு நடவடிக்கை! - முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

தேசியத் தலைநகரின் சாலைகளில் சுற்றித் திரியும் பசுக்களின் பிரச்னையைத் தீா்க்கும் வகையில், தில்லி அரசு பசுக் கொட்டகைகளை கணக்கெடுத்து, அவற்றை பராமரிக்கும் வசதிகளை சீராக இயக்குவதற்கு நிதி உதவி வழங்க ஒரு த... மேலும் பார்க்க