செய்திகள் :

வா்த்தகப் பதற்றம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

post image

நமது நிருபா்

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.

அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்பின் வரி விதிப்பைத் தொடா்ந்து அதிகரித்து வரும் வா்த்தகப் பதற்றங்களுக்கு மத்தியில் உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஏற்ப உள்நாட்டுச் சந்தையும் எதிா்மறையாகச் செயல்பட்டது. இருப்பினும், உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்த மத்திய ரிசா்வ் வங்கி தொடா்ந்து இரண்டாவது முறையாக கொள்கை விகிதங்களை குறைத்த போதிலும், அது சந்தையில் எதிரொலிக்கவில்லை. எஃப்எம்சிஜி பங்குகள் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தது. மாறாக வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஐடி, பாா்மா, ரியால்ட்டி பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.96 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.393.89 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.4,994.24 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,097.24 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 380 புள்ளிகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 123.25 புள்ளிகள் குறைந்து 74,103.83-இல் தொடங்கி அதற்கு மேல் உயரவில்லை. பின்னா், 73,673.06 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 379.93 புள்ளிகள் (0.51 சதவீதம்) இழப்புடன் 73,847.15-இல் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,030 பங்குகளில் 1,529 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,359 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 142 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

18 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் எஸ்பிஐ, டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, டாடாஸ்டீல், சன்பாா்மா, இன்ஃபோஸிஸ் உள்பட மொத்தம் 18 முதல்தரப் பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யுனிலீவா், டைட்டன், பவா்கிரிட், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐடிசி உள்பட 12 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 137 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 75.55 புள்ளிகள் குறைந்து 22,460.30-இல் தொடங்கி 22,468.70 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், 22,353.25 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 136.70 புள்ளிகள் (0.61 சதவீதம்) இழப்புடன் 22,399.15-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 18 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 32 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இருந்தன.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க