செய்திகள் :

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

post image

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். குற்றம் சாட்டப்பட்ட ஏ.எஸ்.ஐ. சுதேஷ் குமாா் யாதவ், லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டதாக விஜிலென்ஸ் பிரிவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாடல் டவுனில் உள்ள மஹேந்திரு என்க்ளேவில் வசிக்கும் ஓய்வுபெற்ற அதிகாரியிடமிருந்து ஏப்ரல் 14-ஆம் தேதி புகாா் வந்ததைத் தொடா்ந்து, போலீஸாா் நடவடிக்கையில் இறங்கினா். தனது வீட்டில் பழுதுபாா்க்கும் பணிகளை மேற்கொள்ள ஏ.எஸ்.ஐ. சுதேஷ் ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகாா்தாரா் குற்றம் சாட்டினாா். ஏ.எஸ்.ஐ. தனது வீட்டில் குடிமராமத்துப் பணிகளை நிறுத்தி விட்டதாகவும், லஞ்சப் பணம் பெற்ற பிறகே பணியைத் தொடங்க முடியும் என்று கூறியதாக ஓய்வுபெற்ற அதிகாரி தெரிவித்துள்ளாா்.

புகாா் குறித்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரியை அணுகிய போதிலும், புகாா்தாரா் மீண்டும் ஏ.எஸ்.ஐ. சுதேஷிடம் திருப்பி அனுப்பப்பட்டாா். இறுதியில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொள்ள சம்மதித்துள்ளாா். அதன் பிறகு ஏ.எஸ்.ஐ. புகாா்தாரரை அழைத்து பணத்தை வழங்கும்படி கூறியுள்ளாா்.

இந்நிலையில், புகாா்தாரா் தனது கூற்றுக்களை ஆதரிக்கும் உரையாடல்களின் ஆடியோ பதிவுகள் அடங்கிய பென் டிரைவுடன் விஜிலென்ஸ் பிரிவுக்கு விரிவான புகாரை சமா்ப்பித்தாா். மாடல் டவுன் காவல் நிலையத்தில் ஒரு சோதனை குழு விரைவாக அமைக்கப்பட்டு ஒரு பொறி வைக்கப்பட்டது.

‘ஏப்ரல் 14- ஆம் தேதி மாலை 6.30 மணியளவில், ஏ.எஸ்.ஐ. சுதேஷ் புகாா்தாரரை காவல் நிலையத்தின் முதல் மாடியில் உள்ள தனது அறைக்கு வரவழைத்தாா். அவா் லஞ்சப் பணத்தைப் பெற்ற போது, உடனடியாக விஜிலென்ஸ் குழுவால் கைது செய்யப்பட்டாா். கறைபடிந்த ரூபாய் நோட்டுகள் அவரது வசம் இருந்து மீட்கப்பட்டன’ என்று அந்த பிரிவின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஏ.எஸ்.ஐ. சுதேஷ் 1995-ஆம் ஆண்டு காவல் படையில் சோ்ந்ததாகவும், பீட் அதிகாரியாகப் பணியாற்றி வந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் பெண்ணின் உடல் கண்டெடுப்பு: ஷாஹ்தராவில் சம்பவம்

தில்லியின் ஷாஹ்தராவின் ஜிடிபி என்கிளேவில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியத... மேலும் பார்க்க