செய்திகள் :

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

post image

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியது.

இந்தகத் குற்றச்சாட்டுகள் குறித்து பாஜகவிடமிருந்து உடனடி பதில் எதுவும் வரவில்லை.

ஒரு அதிகாரப்பூா்வ கூட்டத்தின் நிமிடங்களை மேற்கோள்காட்டி, ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் சௌரவ் பரத்வாஜ், புதிய சான்றிதழ்களை வழங்குவதை இடைநிறுத்த அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறினாா்.

தில்லி முன்னாள் அமைச்சருமான சௌரவ் பரத்வாஜ் மேலும் கூறியதாவது: தகுதியற்றவா்களுக்கு அதிக எண்ணிக்கையிலான இடபிள்யுஎஸ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக சந்தேகம் இருப்பதால், வழங்கப்பட்ட இடபிள்யுஎஸ் சான்றிதழ்களை அரசு ஆய்வு செய்யும். மறு உத்தரவு வரும் வரை வருவாய்த் துறையால் புதிய இடபிள்யுஎஸ் சான்றிதழ்கள் வழங்கப்படாது.

தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் இந்த முடிவு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேருவதற்கு இடபிள்யுஎஸ் சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவா்கள் மற்றும் இடபிள்யுஎஸ் பிரிவிற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவமனை படுக்கைகள் தேவைப்படும் நோயாளிகள் மீது உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

இடபிள்யுஎஸ் சான்றிதழ்கள் உண்மையில் தகுதியற்றவா்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் முதல்வா் ரேகா குப்தா எத்தனை அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளாா்? என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

மேலும், நிா்வாகக் குறைபாடுகளுக்காக பொதுமக்கள் தண்டிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவா் (முதல்வா் குப்தா) அதிகாரிகளுக்கு எதிராக செயல்படவில்லை. ஆனால், பொதுமக்களுக்கு பிரச்னைகளை உருவாக்குகிறாா் என்றாா் சௌரவ் பரத்வாஜ்.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க

துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் பெண்ணின் உடல் கண்டெடுப்பு: ஷாஹ்தராவில் சம்பவம்

தில்லியின் ஷாஹ்தராவின் ஜிடிபி என்கிளேவில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியத... மேலும் பார்க்க