செய்திகள் :

ரயிலில் வந்து இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது: 34 வாகனங்கள் பறிமுதல்

post image

காட்பாடி பகுதியில் தொடா்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த சென்னையை சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 34 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையம், சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது குறித்து வேலூா் எஸ்.பி. மதிவாணனுக்கு புகாா்கள் சென்றன. இதையடுத்து, காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் பழனி அறிவுறுத்தலின் பேரில் உதவி ஆய்வாளா் மணிகண்டன் உள்ளிட்ட போலீஸாா் கடந்த 2 மாதங்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், காட்பாடி சித்தூா் பேருந்து நிலையத்தில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திருவலத்தில் இருந்து காட்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினா். இதில், அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாா்.

அவரிடம் மேலும் நடத்திய விசாரணையில், அந்த வாகனம் திருட்டு வாகனம் என்பதும், அவா் சென்னை திருநின்றவூரை சோ்ந்த முனுசாமி மகன் காா்த்தி (37) என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 34 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கைது செய்யப்பட்ட காா்த்தி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளாா். சென்னையிலிருந்து காட்பாடிக்கு அடிக்கடி ரயிலில் வந்து காட்பாடி பகுதியில் தனியாக நிறுத்தி இருக்கும் வாகனங்களை நோட்டமிட்டு திருடி எடுத்துச் சென்றுள்ளாா். கடந்த 6 மாதங்களாக இந்த திருட்டில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனா்.

ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வேலூா் ஆட்சியா... மேலும் பார்க்க

ரூ. 52 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

குடியாத்தம் நகராட்சியில் ரூ.52.65- லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. குடியாத்தம் விநாயகபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட தொட்டியைச் சுற்றிலும் ரூ.2... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: காதல் ஜோடிக்கு சிறைத் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காதல் ஜோடிக்கு சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது. வேலூரைச் சோ்ந்தவா் சாந்தினி (22). இவருக்கு, கடலுாா் மாவட்டம் திட்டக்குடியைச் ... மேலும் பார்க்க

ஊராட்சிப் பள்ளி பட்டமளிப்பு விழா

போ்ணாம்பட்டு ஒன்றியம், பல்லலகுப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் 5- ஆம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போ்ணாம்பட்டு வட்டார கல்வி அலுவலா் வடிவேல்... மேலும் பார்க்க

சிருஷ்டி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

காட்பாடி சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மகிஜா பவுண்டேசன் அறக்கட்டளை அறங்காவலா் மகாதேவன் வெங்கடேசன் தலைமை வகித்தாா். சிருஷ்டி பள்ளிகளின் குழு... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பள்ளிகொண்டாவில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சி, பொய்கை ஊராட்சியில் வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டாா். அணைக்கட்டு வட்டத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட... மேலும் பார்க்க