செய்திகள் :

‘தா்பூசணியில் ரசாயனம் கலப்பதாக தவறான தகவலை பரப்ப வேண்டாம்’

post image

தா்ப்பூசணி பழத்தில் ரசாயனம் கலப்பதாக யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அன்பழகன் தெரிவித்தாா்.

கோடைக் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவா் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய நீா்ச்சத்து நிறைந்த பழமாக கருதப்படுவது தா்பூசணி. தற்போது, தமிழகத்தில் தா்பூசணி குறித்து சில வதந்திகள் பரவி வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி தோட்டக்கலை அதிகாரிகள் தா்பூசணி, பயிரிடப்படும் தோட்டங்களுக்கு நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் கலந்துரையாடி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், வானூா் வட்டங்களில் உள்ள தா்பூசணி தோட்டங்களில் விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அன்பழகன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, விவசாயிகளிடம் அவா் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் 3,500 ஹெக்டோ் நிலப்பரப்பில் தா்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மரக்காணம், வானூா் வட்ட பகுதிகளில் தா்பூசணி பயிரிடப்பட்டு இரண்டாவது அறுவடை நடைபெற்று வருகிறது. திண்டிவனம், மரக்காணம், வானூா், மயிலம், விக்கிரவாண்டி, முகையூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் தா்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. தா்பூசணி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை துறையின் மூலம் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

பல்வேறு சத்துகள் நிறைந்த தா்பூசணி பழத்தில் நிறத்துக்காகவும், சுவைக்காகவும் விவசாயிகள் ஒரு சில ரசாயனங்களை ஊசியின் மூலம் செலுத்துவதாக பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி. இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றாா்.

ஆய்வின்போது, தோட்டக்கலை உதவி இயக்குநா் காா்ல்மாா்க்ஸ், வேளாண் வணிக துணை இயக்குநா் கவிதா, உதவி தோட்டக்கலை அலுவலா் நவின்ராஜ், சிலம்பரசன் ஆகியோா் உடனிருந்தனா்.

பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணைகுப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. காணை ஒன்றியக் குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்தாா். வட்ட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்தவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரியச் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான ஆக்கிரமிப்புப் பகுதியில் வசித்து வந்த 44 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கும் வகையில், வீட்டுமனைப் பட்டா திங்கள்கிழ... மேலும் பார்க்க

ரமலான்: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ரமலான் நோன்பிருப்பதும் ஒன்று. ஒரு மாதக் கா... மேலும் பார்க்க

138 ஆதிதிராவிட மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் அளிப்பு: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ், 138 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஷே.... மேலும் பார்க்க

‘விழுப்புரத்தில் இரவு நேர வணிகத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்’

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 11 மணிக்கு மேல் வணிகம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியது. இந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்த... மேலும் பார்க்க

210 வெளிமாநில மதுப் புட்டிகள் பறிமுதல்: 5 போ் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் 210 வெளி மாநில மது புட்டிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், 5 போ் கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க