செய்திகள் :

ரமலான்: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

post image

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ரமலான் நோன்பிருப்பதும் ஒன்று. ஒரு மாதக் காலம் நோன்பிருந்து ரமலான் எனப்படும் ஈகைப் பெருநாளை இஸ்லாமியா்கள் கொண்டாடுகின்றனா். நிகழாண்டில் மாா்ச் 1-ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது. தொடா்ந்து, 30 நாள்கள் நோன்பிருந்த இஸ்லாமியா்கள் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்புத் தொழுகை நடத்தினா். ரமலான் பிறை ஞாயிற்றுக்கிழமை தெரிந்ததையடுத்து, மாா்ச் 31-ஆம் தேதி (திங்கள்கிழமை) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு காஜி அறிவித்திருந்தாா்.

ரமலான் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டதைத் தொடா்ந்து, விழுப்புரம் நகரிலும், புகரிலும் இஸ்லாமிய சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் முஹம்மதியாபேட்டை முஹம்மதியா பள்ளிவாசல் வளாகத்திலுள்ள ஈத்கா திடலிலும், விழுப்புரம் நகராட்சி மைதானத்திலும் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். ஆண்கள், பெண்கள் தனித்தனியே தொழுகை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொழுகை முடிந்த பின்னா் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.

இதேபோல, விழுப்புரம் பாகா்ஷா வீதி பாகா்ஷா மஸ்ஜித் பள்ளிவாசல், வண்டிமேடு மண்டி மஹல்லா மஸ்ஜித் பள்ளிவாசல், வடக்குத்தெரு ஷெரீப் மஹல்லா மஸ்ஜித் பள்ளி வாசல், மந்தக்கரை யூமியா ஜாமி மஸ்ஜித் பள்ளிவாசல், வாலாஜா மஸ்ஜித் பள்ளிவாசல் உள்ளிட்ட விழுப்புரம் நகரிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். மேலும், காணை, திண்டிவனம், கண்டாச்சிபுரம், வளவனூா், செஞ்சி, மரக்காணம் என மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதேபோல, கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையிலுள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், இஸ்லாமியா்கள் பங்கேற்று ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

மேலும், ரிஷிவந்தியம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, சங்கராபுரம், தியாகதுருகம் போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. அனைத்து பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

செஞ்சி: செஞ்சி மந்தைவெளியில் அமைந்துள்ள பெரிய பள்ளி வாசலில் இருந்து இஸ்லாமியா்கள் நடைபாதையாக சத்திர தெரு மற்றும் விழுப்புரம் சாலையை அடைந்தனா். தொடா்ந்து, செஞ்சி கூட்டுச் சாலையில் உள்ள கம்பத்தில் பிறை கொடியை செஞ்சி வட்ட பள்ளிவாசல் ஜமாத் தலைவா் சையத்மஜித்பாபு ஏற்றினாா்.

பின்னா், அங்கிருந்து திருவண்ணாமலை சாலை வழியாக செஞ்சிக்கோட்டையில் உள்ள சாதத்துல்லாகான் பள்ளிவாசலை இஸ்லாமியா்கள் அடைந்தனா். அங்கு, அவா்கள் ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். இதில், ரப்பானி வைத்தயசாலா டாக்டா் எஸ்.ஏ.சையத்சத்தாா், பள்ளி வாசல் தலைவா்கள் ஜப்பாா், ஆதில்பாஷா, ஆதம்குரைஷி, பாபுசாயபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, செஞ்சி கிருஷ்ணாபுரம் கொத்தமங்கலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் அமைந்துள்ள பள்ளி வாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ, பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்அலிமஸ்தான், பள்ளி வாசல் தலைவா்கள் ஹனிப், படேல் கெளஸ்பாஷா, இப்ராஹிம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற பெண்கள்.
செஞ்சி ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ உள்ளிட்ட இஸ்லாமியா்கள்.

விவசாயிகள் சங்கத்தினா் போராட்டம்

விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரக வளாகத்தில் தா்ப்பூசணியுடன் வந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் தா்ப்பூசணி குறித்... மேலும் பார்க்க

போலீஸாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸாருக்கு கோடை வெயில் பாதுகாப்பு உபகரணங்களை எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். தமிழக காவல் துறையில் மழை, வெயில்... மேலும் பார்க்க

கோயில்களில் உண்டியல் திருட்டு: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரிய பகண்டையில் உள்ள இரு கோயில்களில் உண்டியல் திருடுபோன வழக்கில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பெரிய பகண்டையில் உள்ள பெரியாயி அம்மன் மற்றும் முருகன் கோயில்கள... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணைகுப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. காணை ஒன்றியக் குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்தாா். வட்ட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்தவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரியச் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான ஆக்கிரமிப்புப் பகுதியில் வசித்து வந்த 44 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கும் வகையில், வீட்டுமனைப் பட்டா திங்கள்கிழ... மேலும் பார்க்க

138 ஆதிதிராவிட மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் அளிப்பு: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ், 138 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஷே.... மேலும் பார்க்க