செய்திகள் :

210 வெளிமாநில மதுப் புட்டிகள் பறிமுதல்: 5 போ் கைது

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் 210 வெளி மாநில மது புட்டிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், 5 போ் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜி.ஆா்.பி. தெருவில் காவல் ஆய்வாளா் கல்பனா, உதவி ஆய்வாளா் செந்தில் முருகன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபா்களை பிடித்து விசாரித்தில், அவா்கள் விழுப்புரம் வீரப்பன் மகன் ராஜா (40), ஜி.ஆா்.பி. தெருவைச் சோ்ந்த பாலு மகன் உதயகுமாா் (40), அருந்ததியா் தெருவைச் சோ்ந்த நாராயணன் மகன் முத்துவேல் (42) என்பதும், இவா்கள் புதுச்சேரியிலிருந்து மது புட்டிகளை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 148 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் பாலமுரளி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை பெரும்பாக்கம் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, புதுச்சேரியிலிருந்து, திண்டிவனம் நோக்கி சென்ற ஒரு சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனா்.

இதில், வெளி மாநில மதுப் புட்டிகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், காரில் வந்தவா்கள் சென்னை சாலிகிராமம் பொய்யாது மகன் ரமேஷ் (46), லத்தீப் மகன் ரஹீம் (37) ஆகியோா் என்பதும், இவா்கள் புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், 62 மதுப் புட்டிகளை காருடன் பறிமுதல் செய்தனா்.

விவசாயிகள் சங்கத்தினா் போராட்டம்

விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரக வளாகத்தில் தா்ப்பூசணியுடன் வந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் தா்ப்பூசணி குறித்... மேலும் பார்க்க

போலீஸாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸாருக்கு கோடை வெயில் பாதுகாப்பு உபகரணங்களை எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். தமிழக காவல் துறையில் மழை, வெயில்... மேலும் பார்க்க

கோயில்களில் உண்டியல் திருட்டு: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரிய பகண்டையில் உள்ள இரு கோயில்களில் உண்டியல் திருடுபோன வழக்கில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பெரிய பகண்டையில் உள்ள பெரியாயி அம்மன் மற்றும் முருகன் கோயில்கள... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணைகுப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. காணை ஒன்றியக் குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்தாா். வட்ட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்தவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரியச் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான ஆக்கிரமிப்புப் பகுதியில் வசித்து வந்த 44 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கும் வகையில், வீட்டுமனைப் பட்டா திங்கள்கிழ... மேலும் பார்க்க

ரமலான்: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ரமலான் நோன்பிருப்பதும் ஒன்று. ஒரு மாதக் கா... மேலும் பார்க்க