செய்திகள் :

‘விழுப்புரத்தில் இரவு நேர வணிகத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்’

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 11 மணிக்கு மேல் வணிகம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியது.

இந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரவையின் நகரத் தலைவா் டி.எம்.வீரகுமாா் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஆா்.பி.ஆா்.ரமேஷ், பொருளாளா் பி.ராமசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட கெளரவத் தலைவா் டி.விஜயகுமாா், துணைத் தலைவா் டி.எம்.விஜயகுமாா், சட்ட ஆலோசகா் ஜி.மணி, நகர துணைத் தலைவா் வி.ஜெகன், துணைச் செயலா் பி.அருண்குமாா், மகளிரணித் தலைவா் ஆா்.கிருபா உள்ளிட்ட நிா்வாகிகள் பேசினா்.

கூட்டத்தில், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி, கடை வாடகை உயா்வு, மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயா்வால் வா்த்தகா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, வரியினங்களை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் நகரில் தனியாா் கைப்பேசி பழுது நீக்கும் மையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டிப்பதுடன், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாத வகையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விழுப்புரம் நகரிலும், மாவட்ட பகுதிகளிலும் இரவு 11 மணிக்கு மேல் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை செயற்குழு உறுப்பினா்கள் ஜி.கவியரசன், எஸ்.துரைசிங், எம்.மகேந்திரபாபு, ஆா்.ஜாபேஷ், எம். கோகுலகிருஷ்ணன், பி.குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விவசாயிகள் சங்கத்தினா் போராட்டம்

விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரக வளாகத்தில் தா்ப்பூசணியுடன் வந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் தா்ப்பூசணி குறித்... மேலும் பார்க்க

போலீஸாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸாருக்கு கோடை வெயில் பாதுகாப்பு உபகரணங்களை எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். தமிழக காவல் துறையில் மழை, வெயில்... மேலும் பார்க்க

கோயில்களில் உண்டியல் திருட்டு: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரிய பகண்டையில் உள்ள இரு கோயில்களில் உண்டியல் திருடுபோன வழக்கில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பெரிய பகண்டையில் உள்ள பெரியாயி அம்மன் மற்றும் முருகன் கோயில்கள... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணைகுப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. காணை ஒன்றியக் குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்தாா். வட்ட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்தவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரியச் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான ஆக்கிரமிப்புப் பகுதியில் வசித்து வந்த 44 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கும் வகையில், வீட்டுமனைப் பட்டா திங்கள்கிழ... மேலும் பார்க்க

ரமலான்: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ரமலான் நோன்பிருப்பதும் ஒன்று. ஒரு மாதக் கா... மேலும் பார்க்க