செய்திகள் :

உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

post image

உகாதி பண்டிகையையொட்டி மேட்டூா் அருகே மாதேஸ்வரன் மலை மாதேஸ்வரன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கா்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வரன் சுவாமி கோயிலில் உகாதி திருவிழா கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 28ஆம் தேதி சுவாமிக்கு எண்ணெய் அபிஷேகம், சிறப்பு சேவைகள் நடைபெற்றன. சனிக்கிழமை அமாவாசையையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை பெரிய தேரோட்டம் நடைபெற்றது. சாலூா் மடாதிபதி மல்லிகாா்ஜுன சுவாமி முன்னிலையில் மலை மாதேஸ்வரன் சுவாமி சேஷத்திர வளா்ச்சிக் குழு செயலாளா் ரகு தலைமையில் இந்தத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் தமிழக, கா்நாடக மாநிலங்களிலிருந்து 3 லட்சம் பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

கோயிலைச் சுற்றி பெரிய தோ் பவனி வந்தபோது தேரின் மீது தானியங்களை வீசி பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றினா். ஞாயிற்றுக்கிழமை மாலை புலி வாகனம், பசுவாகனம், ருத்ராட்ச உற்சவம் நடைபெற்றது. இரவில் தங்க தேரோட்டம் நடைபெற்றது.

ராஜாவேடமணிந்து கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞா்கள்.

பணத்தை எண்ணியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

சேலம்: கோவையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் பணத்தை எண்ணியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் ஜான்சன்பேட்டை கிளைக்க... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு: எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தாா்

சேலம்: சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நீா்மோா் பந்தலை அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், பழங்களை வழங்கின... மேலும் பார்க்க

சங்ககிரி பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா

சங்ககிரி: சங்ககிரியில் உள்ள பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் யுகாதி பண்டிகையையொட்டி பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. யுகாதி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இக்கோயிலில் பொங்கல் விழா நடைபெறும். ந... மேலும் பார்க்க

சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சத்தில் புதிய நுழைவாயில் கதவு

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சம் செலவில் நுழைவாயில் கதவு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. புகழ்பெற்ற சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழு... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் 2 மாதங்களில் 335 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் ரயில்களில் கடத்திய 335 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். ரயில்களில் கஞ்சா கடத்தலைத் தடுக்க ரயில்வே பாதுக... மேலும் பார்க்க

மானிய விலையில் சூரியசக்தி மூலம் இயங்கும் பம்புசெட் பெற விண்ணப்பிக்கலாம்

சேலம்: முதல்வரின் சூரியசக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைத்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியா் ரா... மேலும் பார்க்க