செய்திகள் :

பணத்தை எண்ணியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

post image

சேலம்: கோவையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் பணத்தை எண்ணியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் ஜான்சன்பேட்டை கிளைக்கு உள்பட்ட நடத்துநா் இல்லாத பேருந்து, கடந்த 29 ஆம் தேதி மாலை 6.55 மணியளவில் கோவையிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தது. கனியூா் சுங்கச் சாவடியில் 7.55 மணிக்கு வந்தபோது, புக்கிங் நடத்துநா் பயணிகளிடம் வசூலித்த தொகையை பேருந்து ஓட்டுநரிடம் கொடுத்துள்ளாா்.

பொதுவாக நடத்துநா் இல்லாத பேருந்தில் பணி செய்யும் ஓட்டுநா், நடத்துநரிடமிருந்து பேருந்து கட்டண வசூல் தொகையைப் பெறும்போது, அதை அங்கேயே சரிபாா்த்துவிட்டுதான் பேருந்தை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ஓட்டுநா் சக்திவேல் அதற்கு மாறாக புக்கிங் நடத்துநரிடமிருந்து பெற்ற வசூல் தொகையை அப்போதே எண்ணாமல் பாதுகாப்பின்றி பேருந்தை இயக்கிகொண்டே பணத்தை எண்ணியவாறு சென்றுள்ளாா்.

அவரின் இச்செயல் குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு புகாா் சென்றது. இதுகுறித்து ஓட்டுநா் சக்திவேலிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அவா்மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளாா்.

சேலம்: குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

சேலம், அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. குமரகிரி ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அம்மாபேட்டை தீயணைப்பு வீரா்கள் உதவ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக் கோரி வருவாய்த் துறை அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை சிறப்புக் கூட்டம் சங்கக... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கைப்பேசி, போதைப்பொருள் புழக்கம் குறித்து மாநகரக் காவல் உதவி ஆணையா் அஸ்வினி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசார... மேலும் பார்க்க

வனப் பகுதியில் தீ விபத்தைத் தடுக்க நடவடிக்கை

வனப் பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா். கோடை காலத்தில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க காய்ந்த இலைகள், ச... மேலும் பார்க்க

கோயில் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தும்பிப்பாடியில் கோயில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் அக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தும்பிப்பாடி செட்டிபட்டிய... மேலும் பார்க்க

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் போராட்டம்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் ப... மேலும் பார்க்க