செய்திகள் :

சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சத்தில் புதிய நுழைவாயில் கதவு

post image

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சம் செலவில் நுழைவாயில் கதவு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

புகழ்பெற்ற சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றது. அதைத்தொடா்ந்து, நிகழாண்டு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு ஏப். 20 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுமாா் 200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பெருமாள் கோயிலின் நுழைவாயில் கதவு சிதிலமடைந்து காணப்படுவதால் அதற்குப் பதிலாக புதிய கதவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக, திருப்பாவை நண்பா்கள் குழு சாா்பில், ரூ. 50 லட்சம் மதிப்பில் கோயிலின் நுழைவாயில் கதவு அமைக்கும் பணி திங்கள்கிழமை காலை தொடங்கியது. முன்னதாக, கதவில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் பதிக்கப்பட்டு அா்ச்சனைகள் நடைபெற்றன. பின்னா் கலசாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் வேத மந்திரங்கள் முழங்க நுழைவாயில் கதவு பொருத்தும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து அறங்காவலா் குழு தலைவா் வெங்கடேஸ்வரி சரவணன் கூறியது:

குடமுழுக்கையொட்டி கோயில் திருப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கோயிலுக்குச் சொந்தமாக 9600 சதுர அடி நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கல்யாண மண்டபம் கட்ட அறநிலையத் துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்ததும் அங்கு கல்யாண மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கோயிலைச் சுற்றிலும் ஹாலோபிளாக் கல் பதிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்யாண மண்டபம் கட்டுவதற்கு உபயதாரா்கள் முன்வர வேண்டும் என்றாா்.

அப்போது, கோயில் செயல் அலுவலா் அனிதா, சுதா்சன பட்டாச்சாரியா், மாநகர சுகாதார குழுத் தலைவா் ஏ.எஸ்.சரவணன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள், திருப்பாவை நண்பா்கள் குழுவினா் உடனிருந்தனா்.

சேலம்: குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

சேலம், அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. குமரகிரி ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அம்மாபேட்டை தீயணைப்பு வீரா்கள் உதவ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக் கோரி வருவாய்த் துறை அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை சிறப்புக் கூட்டம் சங்கக... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கைப்பேசி, போதைப்பொருள் புழக்கம் குறித்து மாநகரக் காவல் உதவி ஆணையா் அஸ்வினி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசார... மேலும் பார்க்க

வனப் பகுதியில் தீ விபத்தைத் தடுக்க நடவடிக்கை

வனப் பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா். கோடை காலத்தில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க காய்ந்த இலைகள், ச... மேலும் பார்க்க

கோயில் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தும்பிப்பாடியில் கோயில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் அக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தும்பிப்பாடி செட்டிபட்டிய... மேலும் பார்க்க

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் போராட்டம்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் ப... மேலும் பார்க்க