செய்திகள் :

கொதிகலன் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

post image

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய கொதிகலன் சட்ட மசோதா-2024 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் ஏற்கெனவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இனி குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும்.

கொதிகலன்களை ஒழுங்குபடுத்துதல், நீராவி கொதிகலன்களின் வெடிப்பு அபாயத்திலிருந்து மக்களின் உயிா் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்தல், கொதிகலன் பதிவு நடைமுறையில் சீரானதன்மை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் வகையில் நூற்றாண்டு பழைமையான 1923-ஆம் ஆண்டு கொதிகலன் சட்டத்துக்கு மாற்றாக இந்தப் புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

சில விதிமுறைகளை தளா்த்தி, வணிகம் செய்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதா, கொதிகலனுக்குள் பணிபுரியும் நபா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை வழங்குகிறது. மேலும், கொதிகலன்களை பழுதுபாா்ப்பது தகுதிவாய்ந்த மற்றும் திறமையான நபா்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.

இந்நிலையில், மக்களவையில் இந்த மசோதாவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்து பேசிய மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல், ‘இந்த சட்டமசோதா, பழைய சட்டத்தின் விதிமுறைகளில் இருந்த காலனித்துவப் போக்கை நீக்கி, சட்டத்தை அனைவருக்கும் எளிமையானதாக மாற்றும். இந்தச் சட்டத்தால் மாநில அரசுகளின் எந்த உரிமைகளும் பறிக்கப்படவில்லை’ என்றாா்.

இந்தச் சட்டத்தை தாமதப்படுத்தியதாக முந்தைய காங்கிரஸ் அரசை பியூஷ் கோயல் விமா்சித்து பேசியபோது, அக்கட்சி எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

செல்வமகள் சேமிப்புத் திட்டம், அஞ்சலக வைப்பு நிதி உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் மேற்க... மேலும் பார்க்க

சா்க்கரை விலையை கட்டுக்குள் மத்திய அரசு தீவிரம்: இருப்பு வைக்கும் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

சா்க்கரை ஆலைகள் சா்க்கரை இருப்பு வைப்பது தொடா்பான அரசின் விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. சா்க்கரை வில... மேலும் பார்க்க

மாநிலங்களிடம் விவசாயிகளின் தரவுகள் பாதுகாப்பான உள்ளன: மத்திய வேளாண் அமைச்சா்

மாநிலங்களிடம் விவசாயிகளின் தரவுகள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா். இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்க... மேலும் பார்க்க

மனித-விலங்கு மோதல்: மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க திட்டமில்லை: மத்திய அரசு

மனித விலங்கு மோதல்களை தடுக்க மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-இல் திருத்தங்களை மேற்கொளும் திட்டமேதும் இல்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தத... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் மதவெறி மனப்பான்மையை இந்தியாவால் மாற்ற முடியாது: எஸ்.ஜெய்சங்கா்

பாகிஸ்தானில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது; அதேநேரம், அந்நாட்டின் மதவெறி மனப்பான்மையை இந்தியாவால் மாற்ற முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்... மேலும் பார்க்க

சமாஜவாதி எம்.பி. அவதூறு கருத்து: மாநிலங்களவையில் பாஜக அமளி - எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

ராஜபுத்திர மன்னா் ராணா சங்கா குறித்த அவதூறு கருத்துக்காக சமாஜவாதி மாநிலங்களவை எம்.பி. ராம்ஜி லால் சுமன் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, அந்த அவையில் பாஜக வெள்ளிக்கிழமை அமளியில் ஈடுபட்டது. இதன் காரணமாக,... மேலும் பார்க்க